தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு வந்த வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் அதிஷ்டவசமாக தப்பினார்.
மூன்று தேசிய பாதுகாப்புக் காவலர் (என்.எஸ்.ஜி) பணியாளர்களுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டன, அதே நேரத்தில் அவர்கள் பயணித்த புல்லட் ப்ரூஃப் வாகனம் மோசமாக சேதமடைந்தது என கூறப்படுகிறது. விஜயவாடா-ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் (என்.எச் -65) சவுத்துப்பல் தொகுதியின் தண்டுமல்கபுரம் கிராமத்தில் நாயுடு தனது அமராவதி இல்லத்திலிருந்து ஹைதராபாத் திரும்பிக் கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது.
சவுத்துப்பல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சி வெங்கண்ணா கூறுகையில், நாயுடு ஏழு வாகனங்களுடன் பயணம் செய்து கொண்டிருந்தார். அந்த ஏழு வாகனத்தில் மூன்று முன், மூன்று பின்னால் வந்து கொண்டு இருந்தது. நாயுடு கார் நான்காவது காரில் வந்துகொண்டு இருந்தார்.
திடீரென பசுமாடு ஒன்று காருக்கு குறுக்கே வந்ததை அடுத்து பாதுகாப்பு படையினர் சென்ற கார் பிரேக் போட்டு நிறுத்தப்பட்டது. இதனை அடுத்து பின்னால் வந்த கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதியது.
இந்த விபத்தில் நான்காவது காரில் இருந்த நாயுடு காயமின்றி தப்பினார். ஆனால், சந்திரபாபு நாயுடு உடன் சென்ற மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியது. இரண்டாவது காரில் என்.எஸ்.ஜி.யின் மூன்று பாதுகாப்புப் படையினருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதாகவும், அவர்கள் சேதமடைந்த வாகனத்தை கைவிட்டு மற்றொரு காரில் ஹைதராபாத்திற்கு புறப்பட்டனர் என்று அவர் கூறினார்.
அமெரிக்கா : சர்வேதேச விண்வெளி மையத்துக்கு செல்வதற்காக ஆக்சியம் எனும் தனியார் நிறுவனம் இஸ்ரோ மற்றும் நாசாவுடன் இணைந்து 'ஆக்சியம்…
சென்னை : மதுரையில் கடந்த ஜூன் 22ம் தேதி பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பால் நடத்தப்பட்ட முருகன் பக்தர்கள்…
திருப்பூர் : இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு ஒன்றியத் தலைவராக இருந்த பாலமுருகன் என்பவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்திவந்த…
சென்னை : இயக்குநர் லியோ ஜான் பால் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் ''மார்கன்'' திரைபடம் ஜூன் 27…
லீட்ஸ் : முதல் டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் சதம் அடித்தார். அற்புதமான…
அமெரிக்கா : இன்று (ஜூன் 25, 2025) இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4…