V Narayanasamy [Image source : ANI]
புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதுச்சேரியில் உள்ள பெரிய மார்க்கெட்டை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்கட்சி தலைவர் இரா. சிவா, முன்னாள் முதல்வர் நாராயணசாமி உட்பட இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள், விவசாயிகள் ஆகியோர் பெரிய மார்க்கெட்டை இடிக்கும் பணியை கைவிட வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பிய பேரணியாக புறப்பட்டு ஆளுநர் மாளிகை நோக்கி சென்றனர்.
இந்த முற்றுகை போராட்டத்தை போலீசார் தடுத்து நிறுத்திய நிலையில், காவல் துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கடுமையான தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, பெரிய மார்க்கெட்டை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முற்றுகை போராட்டத்தில், ஈடுபட்ட முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, எதிர்க்கட்சித்தலைவர் சிவா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் முதல்வர் நாராயணசாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் பிரிவின் கீழ் நாராயணசாமி உள்ளிட்ட 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…