Categories: இந்தியா

Cauvery Issue: ஆணைய உத்தரவுகளை அமல்படுத்துக.. கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published by
பாலா கலியமூர்த்தி

காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு உரிய நீரை திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடக்கோரி, தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. அப்போது, தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே காவிரி நதிநீர் விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதாவது, ஒழுங்காற்று குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவுகளை அமல்படுத்த வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழு உத்தரவுகள் மற்றும் பரிந்துரைகளை ஏற்க முடியாது என கூற முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழு, காவிரியில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 5000 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என்று பரிந்துரை மற்றும் உத்தரவுகள் வழங்கப்பட்டது. ஆனால், இந்த உத்தரவை செயல்படுத்த மறுத்து வருகிறது கர்நாடக அரசு.

இந்த நிலையில், இதனை அமல்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு, காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழு உத்தரவுகளுக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களை விசாரிக்க மறுப்பு தெரிவித்தது. தமிழகத்திற்கு 2,500 கன அடி தண்ணீரை மட்டுமே திறக்க முடியும் என திட்டவட்டமாக கர்நாடக அரசு வாதம் வைத்துள்ளது. குடிநீர் பிரச்சனை, நீர்பற்றாக்குறை இருப்பதால் உத்தரவை பின்பற்ற இயலாது எனவும் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்துக்கு 5,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருந்தது. செப்.13ம் தேதி முதல் 15 நாட்களுக்கு நாள்தோறும் 5,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட வேண்டும் என ஆணையம் உத்தரவிட்டிருந்தது.  5,000 கன அடி தண்ணீரை திறந்துவிட உத்தரவிட்டதை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இந்தநிலையில் , தற்போது தமிழ்நாடு – கர்நாடக இடையே நதிநீர் தொடர்பான வழக்கில் ஒழுங்காற்று குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவுகளை அமல்படுத்த வேண்டும் என்று கர்நாடகா அரசுக்கு உத்தரவிட்டு, ஆணையம் உத்தரவுகளுக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களை விசாரிக்க மறுப்பு தெரிவித்தது உச்சநீதிமன்றம்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

அமெரிக்காவின் டெக்சாஸை புரட்டிப்போட்ட வெள்ளம்.., 28 குழந்தைகள் உட்பட 80 பேர் பலி.!

டெக்சாஸ் : அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் தென்-மத்திய பிராந்தியத்தில் உள்ள கெர் கவுண்டியில் கனமழை பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. டெக்சாஸ்…

2 hours ago

கோவையில் இன்று சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார் எடப்பாடி பழனிசாமி.!

கோவை : 2026 தேர்தலுக்காக இன்னும் சற்று நேரத்தில் இபிஎஸ் தனது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார்.  இன்று (ஜூலை 7,…

2 hours ago

தமிழ்நாடு பிரீமியர் லீக்.., முதல்முறை கோப்பை வென்ற திருப்பூர் அணி.!

சென்னை : தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) 2025 தொடரை சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணி வென்றது.…

3 hours ago

“பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும்” – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும், ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி…

3 hours ago

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. மகளிர் உரிமைத்தொகை பெற இன்று முதல் விண்ணப்பம்.!

சென்னை : தமிழகத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்திற்கான விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி இன்று (ஜூலை 07,…

4 hours ago

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் : 58 ஆண்டுகள்.., வரலாற்று வெற்றியைப் பதிவு செய்த இந்தியா.!

பர்மிங்ஹாம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபேற்று வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 336 ரன்கள்…

4 hours ago