Categories: இந்தியா

இருமல் மருந்து ஏற்றுமதிக்கு தரச்சான்று அவசியம் – மத்திய அரசு

Published by
பாலா கலியமூர்த்தி

ஆய்வகங்கள் மருந்தின் தரத்தை உறுதி செய்த பிறகே இருமல் மருந்து ஏற்றுமதிக்கு அனுமதி என அறிவிப்பு.

இந்தியாவில் இருந்து இருமல் மருந்தை ஏற்றுமதி செய்ய இனி தரச்சான்று அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏற்றுமதி செய்யப்படும் மருந்தின் மாதிரியை குறிப்பிட்ட அரசு ஆய்வகங்களுக்கு அனுப்பி பரிசோதனை செய்ய வேண்டும். ஆய்வகங்கள் மருந்தின் தரத்தை உறுதி செய்த பிறகே, இருமல் மருந்து ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கப்படும் என்றுள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு உஸ்பெகிஸ்தானின் காம்பியாவில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தால் டஜன் கணக்கான குழந்தைகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், இருமல் மருந்து ஏற்றுமதிக்கு தரச்சான்று கட்டாயம் என வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

அதன்படி. இருமல் மருந்து ஏற்றுமதியாளர்கள் ஜூன் 1 முதல் குறிப்பிட்ட அரசு ஆய்வகங்களில் தங்கள் தயாரிப்புகளை சோதித்து தரச்சான்று பெற வேண்டும் எனவும் மத்திய அரசு திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளது. கடந்த ஆண்டு காம்பியாவில் 70 குழந்தைகளும், உஸ்பெகிஸ்தானில் 19 குழந்தைகளும் இறந்ததில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் சிரப்கள் தொடர்புடையது என கூறப்பட்டது.

Certificate is required [Image Source : Twitter/@ANI]
Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

14 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

15 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

16 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

16 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

18 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

20 hours ago