chandrayaan-3 [Image Source : Twitter/file image]
சந்திராயன்-3 ஜூலை 13-ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தகவல்.
ஜிஎஸ்எல்வி மார்க் – 3 ராக்கெட் மூலம் சந்திராயன்-3 விண்கலம் ஜூலை 13-ஆம் தேதி (வியாழக்கிழமை) மதியம் 2.30 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திரா ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ்தவான் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து சந்திராயன்-3 விண்ணில் செலுத்தப்படுகிறது. விண்கலத்தின் அனைத்து பாகங்களும் ராக்கெட்டில் பொருத்தப்பட்டுள்ள நிலையில், அறிவிப்பு வெளியாகியுள்ளது
சந்திராயன்-3 விண்கலம் உந்துவிசை, லேண்டர் மற்றும் ரோவர் ஆகிய அமைப்புகளின் கலவையில் இயக்கப்படுகிறது. நிலவின் மேற்பரப்பில் பாதுகாப்பாக இறங்குதல், உலாவுதல், லேண்டர் – ரோவர் கட்டமைப்பை கொண்டுள்ளது சந்திராயன்-3 விண்கலம். நிலவு குறித்த ஆராய்ச்சிக்காக சந்திராயன்-3 விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
சமீபத்தில் சந்திரயான்-3 விண்கலம் LVM MK 3 ராக்கெட்டில் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. அடுத்த கட்டமாக ராக்கெட் அடுக்குகளை ஒருங்கிணைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதாகவும், திட்டமிட்டபடி ஜூலை 12 முதல் 19க்குள் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தெரிவித்திருந்தது. இந்த நிலையில், சந்திராயன்-3 விண்கலம் ஜூலை 13-ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கானா: டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு ஒரு ரியல் எஸ்டேட் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆம், ஒரு ரியல் எஸ்டேட்…
சென்னை : பேட்டிங் அதிரடி சூறாவளி, விக்கெட் கீப்பிங்கில் மின்னல் வேகம், கேப்டன்ஷிப்பின் உச்சம் தொட்ட தமிழகத்தின் தத்துப்பிள்ளையான 'கேப்டன்…
டெக்சாஸ் : அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் தென்-மத்திய பிராந்தியத்தில் உள்ள கெர் கவுண்டியில் கனமழை பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. டெக்சாஸ்…
கோவை : 2026 தேர்தலுக்காக இன்னும் சற்று நேரத்தில் இபிஎஸ் தனது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். இன்று (ஜூலை 7,…
சென்னை : தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) 2025 தொடரை சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணி வென்றது.…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும், ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி…