Chandrayaan3 [Image Source : Twitter/@ISRO]
சந்திராயன்-3 ஜூலை 14ம் தேதி விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது.
எல்விம்3 – எம்4 (LVM3-M4) ராக்கெட் மூலம் சந்திராயன்-3 விண்கலம் ஜூலை 14ம் தேதி (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2:35 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஆந்திரா ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து சந்திராயன்-3 விண்ணில் செலுத்தப்படுகிறது.
சந்திராயன்-3 விண்கலம் உந்துவிசை, லேண்டர் மற்றும் ரோவர் ஆகிய அமைப்புகளின் கலவையில் இயக்கப்படுகிறது. நிலவின் மேற்பரப்பில் பாதுகாப்பாக இறங்குதல், உலாவுதல், லேண்டர் – ரோவர் கட்டமைப்பை கொண்டுள்ளது சந்திராயன்-3 விண்கலம். நிலவு குறித்த ஆராய்ச்சிக்காக சந்திராயன்-3 விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
சமீபத்தில் சந்திரயான்-3 விண்கலம் LVM MK 3 ராக்கெட்டில் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. அடுத்த கட்டமாக ராக்கெட் அடுக்குகளை ஒருங்கிணைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதாகவும், திட்டமிட்டபடி ஜூலை 12 முதல் 19க்குள் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தெரிவித்திருந்தது. இந்த நிலையில், சந்திராயன்-3 விண்கலம் ஜூலை 14ம் தேதி விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…