Categories: இந்தியா

ஜூலை 14ம் தேதி விண்ணில் பாய்கிறது சந்திராயன்-3..! இஸ்ரோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

Published by
செந்தில்குமார்

சந்திராயன்-3 ஜூலை 14ம் தேதி விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது.

எல்விம்3 – எம்4 (LVM3-M4) ராக்கெட் மூலம் சந்திராயன்-3 விண்கலம் ஜூலை 14ம் தேதி (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2:35 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஆந்திரா ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து சந்திராயன்-3 விண்ணில் செலுத்தப்படுகிறது.

சந்திராயன்-3 விண்கலம் உந்துவிசை, லேண்டர் மற்றும் ரோவர் ஆகிய அமைப்புகளின் கலவையில் இயக்கப்படுகிறது. நிலவின் மேற்பரப்பில் பாதுகாப்பாக இறங்குதல், உலாவுதல், லேண்டர் – ரோவர் கட்டமைப்பை கொண்டுள்ளது சந்திராயன்-3 விண்கலம். நிலவு குறித்த ஆராய்ச்சிக்காக சந்திராயன்-3 விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

சமீபத்தில் சந்திரயான்-3 விண்கலம் LVM MK 3 ராக்கெட்டில் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. அடுத்த கட்டமாக ராக்கெட் அடுக்குகளை ஒருங்கிணைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதாகவும், திட்டமிட்டபடி ஜூலை 12 முதல் 19க்குள் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தெரிவித்திருந்தது. இந்த நிலையில், சந்திராயன்-3 விண்கலம் ஜூலை 14ம் தேதி விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

டாஸ்மாக் பணியாளர்களுக்கு 2000 ஊதிய உயர்வு – டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி.!

சென்னை : டாஸ்மாக் ஊழியர்களுக்கான சம்பள உயர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி…

24 minutes ago

தமிழ்நாடு காவல்துறையில் 33 உயரதிகாரிகள் பணியிட மாற்றம்.!

சென்னை : தமிழ்நாடு காவல்துறையில் 33 ஐ.பி.எஸ்.உயரதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு இன்று (ஜூலை 14, 2025)…

44 minutes ago

நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: சிதம்பரம் ரயிலில் புறப்பட்ட மு.க.ஸ்டாலின்.!

கடலூர் : கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் இரயிலில் பயணம் மேற்கொண்டார்.…

2 hours ago

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்திற்கு அதிரடி மாற்றம்.!

சென்னை : சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார். அதேசமயம்,…

2 hours ago

லண்டனில் சிறிய ரக விமானம் தரையில் விழுந்து நொறுங்கி விபத்து – 4 பேர் பலி.!

சவுத்எண்ட் : லண்டன் சவுத்எண்ட் விமான நிலையத்தில் நேற்றைய தினம் (ஜூலை 13) மாலை 4 மணியளவில் ஒரு சிறிய…

2 hours ago

பட ஷூட்டிங்கில் ஸ்டண்ட் மாஸ்டர் பலி.., இயக்குநர் பா.ரஞ்சித் மீது வழக்குப்பதிவு.!

சென்னை : நாகப்பட்டினம் மாவட்டம் விழுந்தமாவடியில் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடைபெற்று வந்த 'வேட்டுவம்' படப்பிடிப்பின்போது, நேற்றைய தினம் (ஜூலை 13)…

3 hours ago