PMModiTweet [File Image]
ஜூலை 14ம் தேதி பொன் எழுத்துக்களில் பொறிக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் செய்துள்ளார்.
இந்தியாவின் மூன்றாவது விண்கலமான சந்திராயன்-3 விண்கலம் நிலவின் தென்துருவத்தை நோக்கி இன்று விண்ணில் செலுத்தப்படுகிறது. அதன்படி, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள இரண்டாவது ஏவுதளத்திலிருந்து இன்று பிற்பகல் 2.35 மணிக்கு சந்திராயன்-3 செலுத்தப்பட உள்ளது.
இதற்கான 25 மணிநேர கவுண்டவுன் நேற்று தொடங்கியது. இதற்கிடையில், இன்று விண்ணில் செலுத்தப்படும் சந்திராயன்-3 விண்கலத்தை சுமந்துசெல்லும் LVM-3 ராக்கெட்டிற்கான திரவ எரிபொருள் நிரப்பப்பட்டுள்ளதாகவும், ராக்கெட் ஏவுவதற்கான இறுதிக்கட்ட சோதனையும் நிறைவுற்றதாகவும் இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்தியாவின் விண்வெளித் துறையைப் பொறுத்த வரையில் 14 ஜூலை 2023 எப்பொழுதும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும். சந்திரயான்-3 நமது மூன்றாவது சந்திரப் பயணத்தைத் தொடங்கும். இந்த குறிப்பிடத்தக்க பணி நமது தேசத்தின் நம்பிக்கைகளையும் கனவுகளையும் சுமந்து செல்லும் என்று பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.
கோழிக்கோடு : கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள பேப்பூர் கடற்கரையில் ஒரு சரக்குக் கப்பல் தீப்பிடித்தது. இந்தக் கப்பல் சிங்கப்பூர்…
சென்னை : தவெகவில் இன்று புதிதாக இணைந்த முன்னாள் IRS அதிகாரி அருண்ராஜ்-க்கு கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கி…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று பல மாவட்டங்களில் கனமழைக்கு…
சென்னை : தாம்பரம் பகுதியில் உள்ள அரசு விடுதியில் தங்கி 8-ஆம் வகுப்பு படித்து வரும் 13-வயது சிறுமி ஒருவருக்கு பாலியல்…
கோவை : நடப்பாண்டு (2025) TNPL கிரிக்கெட் தொடர் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற போட்டியில் ஐட்ரீம்…
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில் கட்சிகள் அனைத்தும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுக்கொண்டு அதற்கான…