தீபாவளிக்கு பட்டாசு விற்க, வெடிக்க தடை – முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு!

Published by
பாலா கலியமூர்த்தி

இந்தாண்டு தீபாவளியையொட்டி டெல்லியில் பட்டாசு விற்பனைக்கும், வெடிக்கவும் தடை விதித்தது மாநில அரசு.

இதுதொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், கடந்த மூன்று வருடங்களில் தீபாவளியின் போது டெல்லியில் காற்று மாசு ஏற்படும் சூழ்நிலை அதிகரித்துள்ளது.

இதனால் கடந்த ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் அனைத்து வகையான பட்டாசுகளையும் சேமிக்கவும், விற்பனை செய்யவும், வெடிக்கவும் முழு தடை விதிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

மக்களின் உயிர்களை காப்பாற்றவே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் காற்று மாசு காரணமாக தொடர்ந்து டெல்லியில் நான்கு ஆண்டாக பட்டாசு வெடிக்க, விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு வியாபாரிகள் பட்டாசுகளை பதுக்கி வைத்த பிறகு மாசுபாட்டின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, தாமதமாக முழு தடை விதிக்கப்பட்டது. இது வியாபாரிகளுக்கு இழப்பை ஏற்படுத்தியது.

இந்த முறை முன்கூட்டியே தடை விதிக்கப்பட்டதால் முழு தடையை கருத்தில் கொண்டு, எந்த வித சேமிப்பையும் செய்ய வேண்டாம் என்று அனைத்து வியாபாரிகளுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

விண்வெளி நிலையத்தை அடைந்த டிராகன்…புதிய சாதனை படைத்தார் சுபான்ஷு சுக்லா!

விண்வெளி நிலையத்தை அடைந்த டிராகன்…புதிய சாதனை படைத்தார் சுபான்ஷு சுக்லா!

அமெரிக்கா : ஆக்ஸியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட…

54 minutes ago

அமெரிக்கா தாக்கியதில் எங்கள் அணு உலை மையங்கள் ரொம்ப சேதம்! ஒப்புக்கொண்ட ஈரான்!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே 12 நாட்களாக போர் நீடித்த நிலையில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. இதில்…

1 hour ago

இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டனமா? NHAI கொடுத்த விளக்கம்!

டெல்லி : ஜூன் 26, 2025 அன்று, சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு…

2 hours ago

ஹிந்தி இந்திய மொழிகளுக்கு நண்பன் – உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…

3 hours ago

இனிமே ஒரே விலையில் ஆட்டிறைச்சி விற்பனை -தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…

3 hours ago

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.., கோயம்புத்தூர், நீலகிரிக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை.!

சென்னை : நாட்டின் வடமேற்கு மத்திய பகுதிகள், மத்திய பகுதிகள், கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த 7…

3 hours ago