மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் சகோதரர் ஆஷிம் பானர்ஜி காலமானார்.
ஆஷிம் பானர்ஜி கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு ஒரு மாதமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று காலை 9:20 மணிக்கு சிகிக்சை பலனின்றி அவர் இறந்தார்.
முதல்வரின் உறவினர் நெருங்கிய வட்டம் கூறுகையில், கொரோனா நெறிமுறைக்கு இணங்க அவரது இறுதி சடங்குகள் இன்று பிற்பகல் நிமத்லா மகாஸ்மாஷனில் செய்யப்படும் என்று குடும்பத்தின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வரும் அவரது சகோதரரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
மேற்கு வங்களத்தில் கடந்த 24 மணி நேரத்தில், 20,748 பேர் புதிதாக கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனுடன்,உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், மாநிலத்தில் 138 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். இதன் மூலம், வங்காளத்தில் தொடர்ச்சியாக பத்து நாட்களுக்கு 100-க்கும் மேற்பட்ட உயிரிழந்து நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…