கொரோனா தொற்று காரணமாக மேடையில் பேசிக்கொண்டிருந்தபோதே மயங்கி விழுந்த குஜராத் முதல்வர் விஜய் ரூபானி அவர்கள் இன்னும் ஒரு வாரத்திற்கு மருத்துவமனையில் இருக்க வேண்டியிருக்கும் என குஜராத் துணை முதல்வர் நிதின் படேல் அவர்கள் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா எனும் நகரில் நேற்று நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய போது குஜராத் முதல்வர் விஜய் ரூபாணி அவர்கள் திடீரென மயங்கி விழுந்தார். இந்நிலையில் முதல்வர் ரூபானிஅகமதாபாத் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதல்வருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்பின் பிரதமர் மோடி அவர்கள் முதல்வர் ரூபானியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடல்நிலை குறித்து விசாரித்து அறிந்திருந்தார்.
தற்போது இது குறித்து தகவல் தெரிவித்துள்ள குஜராத் துணை முதல்வர் நிதின் படேல் அவர்கள், கொரோனா தொற்று உறுதியாகி இருக்கும் நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரக்கூடிய குஜராத் முதல்வர் விஜய் ரூபானி அவர்கள் இன்னும் ஒரு வாரத்திற்கு மருத்துவமனையில் இருக்க வேண்டியிருக்கும் என தகவல் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…