மக்களவையில் இன்று மசோதாவை தாக்கல் செய்து உள்துறை அமைச்சர் கூறியதாவது குடியுரிமை சட்டம் என்பது சிறுபான்மையினருக்கு 0.001% கூட எதிரானது அல்ல.முன்னால் பிரதமர் இந்திரா காந்தி பங்களாதேஷில் இருந்து மக்களை அழைத்து வருவதற்காக 14வது சட்டப்பிரிவை மேற்கோள் காட்டி கூறினார். அப்போது ஏன் பாகிஸ்தானை பற்றி எதுவும் சொல்லவில்லை.இத்தனை ஆண்டுகளில், உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமான மக்களை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது.ஆனால் இது போன்று வேறு எந்த நாட்டிலும் இல்லை.
அமெரிக்காவில் வழங்கப்படும் கிரீன் கார்டில் இதேபோன்றே கடுமையான விதிமுறைகள் உள்ளன. இந்திய நாட்டின் அருகே பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் என மூன்று அண்டை நாடுகள் உள்ளன. இவர்களின் நிலப்பகுதியில் இஸ்லாம்தான் அவர்களின் சட்டமாக உள்ளது என்று அந்த அரசியலமைப்பு சட்டங்கள் கூறுகின்றன.ஒன்றினைந்த நாட்டின் பிரிவினையின் போது, சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவே நேருவிற்கும் லியாகத்திற்குமான ஒப்பந்தம் கையெழுத்தானது. இது இந்தியாவில் முறையாக நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், சமணர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்கள் நம் அண்டை நாடான பாகிஸ்தானில் மோசமாக நடத்தப்பட்டுள்ளனர்.
பாஜக ஒன்றும் நாட்டை பிளவுபடுத்தவில்லை.இந்த மசோதா முஸ்லிம் மக்களின் உரிமைகளை பறிக்கும் என்று கூறவில்லை.ஆனால், காங்கிரஸ் கட்சி இந்த நாட்டை மதத்தின் அடிப்படையில் பிரித்தது. இந்த மசோதா நிறைவேறினால் 1.75 கோடி மக்கள் பயனடைவார்கள். அதனால் இந்த மசோதாவை எதிர்க்க வேண்டிய அவசியமில்லை.இந்த குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவால் அநீதி ஏற்படும் என கேள்வி எழுப்புவதே தவறான செயல். நாடு பிளவு பட்டபோது 1947ம் ஆண்டில் இந்தியாவுக்கு புலம்பெயர்ந்தவர்களை எல்லாம் இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொண்டது.எனவே, இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் வாழும் மக்கள் கிழக்கு மற்றும் மேற்கு பாகிஸ்தானில் இருந்து புலம்பெயர்ந்தவர்களாக கூட இருப்பார்கள்.ஏன் அத்வானி, மன்மோகன் சிங் ஆகியோர் கூட புலம்பெயர்ந்தவர்கள் தான்.என்றார்.
லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங்…
அமெரிக்கா : ஈரானுக்கு எதிராக ஆபரேஷன் 'மிட்நைட் ஹேமர்' என்ற பெயரில் அமெரிக்கா வெற்றிகரமாக அணுசக்தி தளங்களை தாக்கியுள்ளது. இந்நிலையில்,…
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…