கூட்டணியில் விரிசல்.., புதுச்சேரியில் பாமக தனித்துப் போட்டி..!

Published by
murugan

கூட்டணியில் இருந்து விலகிய பாமக முதற்கட்டமாக 9 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக, என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, பாமக ஆகிய கட்சிகள் இடம் பெற்றிருந்தன. வருகின்ற சட்டமன்றத் தோ்தலை என்.ஆா்.காங்கிரஸ் தலைமையில் பாஜக மற்றும் அதிமுக சந்திக்கவுள்ளனர். புதுச்சேரியில் உள்ள மொத்தமுள்ள 30 தொகுதிகளில் என்.ஆா். காங்கிரஸ் 16 தொகுதிகளும், மீதமுள்ள  14 தொகுதிகளில் பாஜக, அதிமுக, பாமக போட்டியிட ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இதனால், பாஜக-அதிமுக மற்றும் பாமக இடையே நீண்ட தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நடைபெற்று வந்த நிலையில், இறுதியாக 9 தொகுதிகளில் பாஜகவும், 5 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், தொகுதிப் பங்கீட்டில் பாமகவிற்கு ஒரு இடம் கூட ஒதுக்கவில்லை. இந்நிலையில், நேற்று அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியானது. அதில்,

உப்பளம்- A. அன்பழகன், உருளையன்பேட்டை – ஓம் சக்தி சேகர், காரைக்கால் தெற்கு – K.A.Uஅசனா, முத்தியால்பேட்டை – வையாபுரி மணிகண்டன், முதலியார் பேட்டை – A. பாஸ்கர் ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

இதனால், புதுச்சேரியில் அதிமுக-பாஜக தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பாமக வெளியேறியது. கூட்டணியில் இருந்து விலகிய பாமக முதற்கட்டமாக 9 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

  • மன்னாடிப்பட்டு – வெங்கடேசன்,
  • அரியாங்குப்பம் – சிவராமன்,
  • மங்கலம் – மதியழகன்,
  • தட்டாஞ்சாவடி – கதிர்வேல்,
  • லாஸ்பேட்டை – நரசிம்மன்,
  • மணவெளி – கணபதி,
  • இந்திராநகர் – வடிவேல்,
  • ஊசுடு – கலியபெருமாள்,
  • திருபுவனை – சாண்டில்யன்.

மீதமுள்ள 21 தொகுதிகளுக்கான விரைவில் வெளியிடப்படும் என புதுச்சேரி பாமக அமைப்பாளர் கோ.தன்ராஜ் தெரிவித்துள்ளார்.

Published by
murugan

Recent Posts

”பெங்களூருவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மனதை நொறுக்கியது” – ராகுல் காந்தி இரங்கல்.!

”பெங்களூருவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மனதை நொறுக்கியது” – ராகுல் காந்தி இரங்கல்.!

கர்நாடகா : பெங்களூருவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி) அணியின் வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு…

7 hours ago

பெங்களூரு உயிரிழப்பு: ரூ.10 லட்சம் நிவாரணம் – முதல்வர் சித்தராமையா அறிவிப்பு.!

பெங்களூர் :  பெங்களூருவில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 11 பேர் பலியாகியுள்ளனர், 50-க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதற்கு அரசின்…

7 hours ago

”பெங்களூருவில் நிகழ்ந்த கூட்ட நெரிசல் சம்பவம் துரதிர்ஷ்டவசமானது” – பிரதமர் மோடி இரங்கல்.!

பெங்களூர் : 18 வருட காத்திருப்புக்குப் பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் முறையாக ஐபிஎல் பட்டத்தை வென்றது.…

7 hours ago

”பெங்களூரு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” – துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார்.!

பெங்களூரு : 2025ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் இறுதி போட்டியான நேற்று பஞ்சாப் அணியை வென்று ஆர்சிபி முதல்முறையாக ஐபிஎல்…

8 hours ago

ஆர்சிபி வெற்றி விழாவில் சோகம்.., மெட்ரோ நிலையங்கள் மூடல்.!

பெங்களூரு : 18 ஆண்டு தவத்திற்கு பின், ஐபிஎல் தொடரில், ஆர்சிபி முதல்முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்றது. இதனால்,…

8 hours ago

ஆர்சிபி கொண்டாட்டத்தில் சோகம்.., பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு.!

பெங்களூரு : 2025ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில், நேற்றைய தினம் நடந்த இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை வென்று ஆர்சிபி முதல்முறையாக…

9 hours ago