நிதி நெருக்கடியால் தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவி..!

Published by
murugan

டெல்லியில்  உள்ள ஸ்ரீ ராம் மகளிர் கல்லூரியின் மாணவி ஐஸ்வர்யா கடந்த  நவம்பர் 2 ம் தேதி தெலுங்கானாவில் உள்ள தனது சொந்த ஊரில் தற்கொலை செய்து கொண்டார்.

உள்ளூர் காவல்துறையினரின் கூறுகையில்,  ஐஸ்வர்யா ரெட்டி ரங்கா ரெட்டி மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் மெக்கானிக்காக இருக்கும் சீனிவாஸின் மகள்.  இவர் 12 -ஆம் வகுப்பில் 98.5 சதவீதம் மதிப்பெண் பெற்றுள்ளார். ஐஸ்வர்யாவின் தந்தை சீனிவாஸ் ரெட்டி, கடந்த ஆண்டு ஐஸ்வர்யாவை  டெல்லியில்  புகழ்பெற்ற கல்லூரியில் சேர்த்துள்ளார்.

ஐஸ்வர்யா பி.எஸ்சி. கணிதம் (ஹானர்ஸ்) படித்து வந்துள்ளார். ஐஸ்வர்யாவின் தந்தை ஐஸ்வர்யா உயர் கல்விக்காக தனது வீட்டை அடமானம் வைத்து ரூ . 2 லட்சம் கடன் வாங்கியதாகவும்,  இதனால்,  குடும்பத்தின் நிதி நெருக்கடி மேலும் அதிகரித்தது என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த  நவம்பர் 2 ம் தேதி தெலுங்கானாவில் உள்ள தனது சொந்த ஊரில் ஐஸ்வர்யா தற்கொலை செய்து கொண்டார். தெலுங்கில் எழுதப்பட்ட கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில்,  ஐஸ்வர்யா ரெட்டி தான் ஒரு ஐ.ஏ.எஸ் ஆக விரும்புவதாகவும், மார்ச் மாதத்தில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக வீட்டிற்கு வந்ததாகவும், ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் வகுப்புகளைத் தொடர கை மடிக்கணினியை வாங்கக்கூட முடியவில்லை என கூறப்பட்டுள்ளது.

இதனால், எனது குடும்பத்திற்கு ஒரு சுமையாக மாற விரும்பவில்லை  எனது மரணத்திற்கு யாரும் பொறுப்பல்ல. நான் படிக்காமல் வாழ முடியாது என எழுதப்பட்டு இருந்தது.

Published by
murugan

Recent Posts

பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!

பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!

சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…

8 hours ago

“நாங்க ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.3,000 வழங்கப்படும்”…சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் பேச்சு!

லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…

9 hours ago

அமெரிக்கா கிட்ட பேச்சுவார்த்தையா? வாய்ப்பே இல்லை மன்னிக்கவே மாட்டோம்! ஈரான் திட்டவட்டம்!

தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…

10 hours ago

“பாஜக எப்போதும் மக்கள் பிரச்சனைகளை கையில் எடுக்காது”- சீமான் சாடல்!

சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…

10 hours ago

விஜய் பிறந்த நாள் ஸ்பெஷல் : ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…

12 hours ago

தீவிரமடையும் போர் : இஸ்ரேல் விமான நிலையத்தை குறி வைத்து தாக்கிய ஈரான்!

தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…

12 hours ago