நிதி நெருக்கடியால் தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவி..!

Published by
murugan

டெல்லியில்  உள்ள ஸ்ரீ ராம் மகளிர் கல்லூரியின் மாணவி ஐஸ்வர்யா கடந்த  நவம்பர் 2 ம் தேதி தெலுங்கானாவில் உள்ள தனது சொந்த ஊரில் தற்கொலை செய்து கொண்டார்.

உள்ளூர் காவல்துறையினரின் கூறுகையில்,  ஐஸ்வர்யா ரெட்டி ரங்கா ரெட்டி மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் மெக்கானிக்காக இருக்கும் சீனிவாஸின் மகள்.  இவர் 12 -ஆம் வகுப்பில் 98.5 சதவீதம் மதிப்பெண் பெற்றுள்ளார். ஐஸ்வர்யாவின் தந்தை சீனிவாஸ் ரெட்டி, கடந்த ஆண்டு ஐஸ்வர்யாவை  டெல்லியில்  புகழ்பெற்ற கல்லூரியில் சேர்த்துள்ளார்.

ஐஸ்வர்யா பி.எஸ்சி. கணிதம் (ஹானர்ஸ்) படித்து வந்துள்ளார். ஐஸ்வர்யாவின் தந்தை ஐஸ்வர்யா உயர் கல்விக்காக தனது வீட்டை அடமானம் வைத்து ரூ . 2 லட்சம் கடன் வாங்கியதாகவும்,  இதனால்,  குடும்பத்தின் நிதி நெருக்கடி மேலும் அதிகரித்தது என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த  நவம்பர் 2 ம் தேதி தெலுங்கானாவில் உள்ள தனது சொந்த ஊரில் ஐஸ்வர்யா தற்கொலை செய்து கொண்டார். தெலுங்கில் எழுதப்பட்ட கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில்,  ஐஸ்வர்யா ரெட்டி தான் ஒரு ஐ.ஏ.எஸ் ஆக விரும்புவதாகவும், மார்ச் மாதத்தில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக வீட்டிற்கு வந்ததாகவும், ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் வகுப்புகளைத் தொடர கை மடிக்கணினியை வாங்கக்கூட முடியவில்லை என கூறப்பட்டுள்ளது.

இதனால், எனது குடும்பத்திற்கு ஒரு சுமையாக மாற விரும்பவில்லை  எனது மரணத்திற்கு யாரும் பொறுப்பல்ல. நான் படிக்காமல் வாழ முடியாது என எழுதப்பட்டு இருந்தது.

Published by
murugan

Recent Posts

INDvsENG : “நானும் சதம் அடிப்பேன்”…தோனி சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!

INDvsENG : “நானும் சதம் அடிப்பேன்”…தோனி சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…

4 hours ago

இஸ்ரேலுடன் அமெரிக்காவும் போரில் இறங்கினால் எல்லாருக்கும் ஆபத்து! ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரிக்கை!

ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…

5 hours ago

ஆசை இருக்கு கண்டிப்பா திமுகவிடம் 12 தொகுதிகள் கேட்போம்! துரை வைகோ பேச்சு!

திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…

6 hours ago

அகமதாபாத் விமான விபத்து : ஏர் இந்தியா நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை!

அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…

6 hours ago

ஜூன் 27 வரை மழைக்கு வாய்ப்பு! அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…

6 hours ago

“என் குழந்தைகளுக்கு ஹனுமான்தான் தெரியும்.. ஸ்பைடர் மேன்-சூப்பர் மேன் தெரியாது” – நமீதா பெருமிதம்!

சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…

8 hours ago