டெல்லியில் உள்ள ஸ்ரீ ராம் மகளிர் கல்லூரியின் மாணவி ஐஸ்வர்யா கடந்த நவம்பர் 2 ம் தேதி தெலுங்கானாவில் உள்ள தனது சொந்த ஊரில் தற்கொலை செய்து கொண்டார்.
உள்ளூர் காவல்துறையினரின் கூறுகையில், ஐஸ்வர்யா ரெட்டி ரங்கா ரெட்டி மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் மெக்கானிக்காக இருக்கும் சீனிவாஸின் மகள். இவர் 12 -ஆம் வகுப்பில் 98.5 சதவீதம் மதிப்பெண் பெற்றுள்ளார். ஐஸ்வர்யாவின் தந்தை சீனிவாஸ் ரெட்டி, கடந்த ஆண்டு ஐஸ்வர்யாவை டெல்லியில் புகழ்பெற்ற கல்லூரியில் சேர்த்துள்ளார்.
ஐஸ்வர்யா பி.எஸ்சி. கணிதம் (ஹானர்ஸ்) படித்து வந்துள்ளார். ஐஸ்வர்யாவின் தந்தை ஐஸ்வர்யா உயர் கல்விக்காக தனது வீட்டை அடமானம் வைத்து ரூ . 2 லட்சம் கடன் வாங்கியதாகவும், இதனால், குடும்பத்தின் நிதி நெருக்கடி மேலும் அதிகரித்தது என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த நவம்பர் 2 ம் தேதி தெலுங்கானாவில் உள்ள தனது சொந்த ஊரில் ஐஸ்வர்யா தற்கொலை செய்து கொண்டார். தெலுங்கில் எழுதப்பட்ட கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில், ஐஸ்வர்யா ரெட்டி தான் ஒரு ஐ.ஏ.எஸ் ஆக விரும்புவதாகவும், மார்ச் மாதத்தில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக வீட்டிற்கு வந்ததாகவும், ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் வகுப்புகளைத் தொடர கை மடிக்கணினியை வாங்கக்கூட முடியவில்லை என கூறப்பட்டுள்ளது.
இதனால், எனது குடும்பத்திற்கு ஒரு சுமையாக மாற விரும்பவில்லை எனது மரணத்திற்கு யாரும் பொறுப்பல்ல. நான் படிக்காமல் வாழ முடியாது என எழுதப்பட்டு இருந்தது.
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…