Categories: இந்தியா

லட்ச கணக்கில் நிவாரணதொகை.. கணவர் இறந்ததாக போலி நாடகமாடிய மனைவி.!

Published by
Muthu Kumar

ஒடிசா ரயில் விபத்தில் நிவாரணத்திற்காக தன கணவர் இறந்ததாக மனைவி நாடகமாடிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஒடிசாவில் பாலசோர் அருகே 3 ரயில்கள் மோதிய கோர விபத்தில் கிட்டத்தட்ட 280 பேர் பலியான சம்பவம் நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியது. இந்த விபத்தில் தனது கணவரும் இறந்து விட்டதாக கட்டாக் மாவட்டத்தில் உள்ள மணிபண்டாவைச் சேர்ந்த கீதாஞ்சலி தத்தா என்ற பெண், ஏதோ ஒரு உடலை தனது கணவர் பிஜய் தத்தாவுடையது என அடையாளமும் காட்டியுள்ளார்.

ஆனால் ஆவணங்களைச் சரிபார்த்த போது அவர் கூறியது பொய்யான தகவல் எனத் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த பெண்ணை எச்சரித்து அனுப்பிய போதிலும், கீதாஞ்சலியின் கணவர் அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து, கைது செய்யப்படுவோம் என அச்சத்தில் கீதாஞ்சலி தலைமறைவாகியுள்ளார்.

அரசு வழங்கும் நிவாரண பணத்திற்காக தான் இறந்துவிட்டதாக நாடகமாடிய கீதாஞ்சலி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிஜய் தத்தா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கீதாஞ்சலி மற்றும் அவரது கணவர் பிஜய் தத்தா இருவரும் கடந்த 13 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

முன்னதாக, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ 5 லட்சம் நிவாரணமும், பிரதமர் நரேந்திர மோடி ரூ 2 லட்சம் நிவாரணமும் அறிவித்தனர். இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by
Muthu Kumar

Recent Posts

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

7 hours ago

இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!

பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…

7 hours ago

மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!

பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…

8 hours ago

தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் வெட்டிக் கொலை.!

காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

9 hours ago

5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…

10 hours ago

“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

10 hours ago