பணியாளர்களுக்கு விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம்.
இந்தியன் ரயில்வே தங்களது 13 லட்சம் பணியாளர்களுக்கும் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தை வழங்க உள்ளது. இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஏற்கனவே ரயில்வே ஊழியர்களுக்கும், அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் தாராளமயமாக்கப்பட்ட சுகாதாரத்திட்டம் மற்றும் மத்திய அரசின் சுகாதார சேவைகள் ஆகியவற்றின் கீழ் மருத்துவ உதவி அளிக்கப்பட்டுவரும் நிலையில், தற்போது விரிவான மருத்துவ காப்பீடு வழங்க திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அவசர காலத்தின் போது ரயில்வே ஊழியர்களுக்கு காப்பீடு தொகையை வழங்கும் நோக்கில் விரிவான காப்பீடு திட்டம் குறித்த அனைத்து அம்சங்களையும் ஆராய குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே இதுகுறித்து ரயில்வே மண்டலங்களின் பொது மேலாளர்கள் உள்ளிட்டோர் கருத்து தெரிவிக்கலாம் எனவும் இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
இந்திய ரயில்வேயின் கட்டுப்பாட்டின் கீழ், நாடு முழுவதும் 586 சுகாதார மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல் 56 மருத்துமனைகளும், 45 துணை மருத்துவமனைகளும், 16 மண்டல மருத்துவமனைகளும் செயல்பட்டுவருகின்றன.
மேலும், அதில் 2,500 மருத்துவர்களும், 35,000 மருத்துவ பணியாளர்களும் பணியாற்றி வருகின்றனர்.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…