Annamalai [Image source : The Hindu]
அண்ணாமலையை கர்நாடக தேர்தல் பொறுப்பாளராக நியமித்தவருக்கு நன்றி என காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் சசிகாந்த் விமர்சனம் செய்துள்ளார்.
கர்நாடகாவில் நடைபெற்று முடிந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பது இதுவே முதல் முறை . ஆளும் பாஜக 66 இடங்களை மட்டுமே கைப்பற்றி தோல்வியை தழுவியது.
கர்நாடக தேர்தல் பொறுப்பாளராக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நியமிக்கபட்டு இருந்தார். இது குறித்து விமர்சித்த கர்நாடக காங்கிரஸ் கட்சி தேர்தல் பொறுப்பாளர் சசிகாந்த் செந்தில், கர்நாடகாவில் பாஜக தேர்தல் பொறுப்பாளராக அண்ணாமலை நியமிக்கப்பட்டதால் தான், காங்கிரஸ் கட்சிக்கு
கூடுதலாக 10 முதல் 20 வரை தொகுதிகள் கிடைத்தது என கூறியுள்ளார்.
மேலும் , அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகிய ஜெகதீஷ் ஷெட்டர் போன்ற மூத்த தலைவர்களை அவமானப்படுத்தும் விதமாக பேசினார் என்றும், மாநில பாஜகவை ஒழிக்கும் வேலையில் அண்ணாமலை செயல்பட்டார் என்றும், அண்ணாமலையை தேர்தல் பொறுப்பாளராக நியமிக்க ஐடியா கொடுத்தவருக்கு மிக்க நன்றி என்றும் சசிகாந்த் செந்தில் விமர்சித்துள்ளார் .
வாஷிங்டன் : ஜூலை 30, 2025: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 20…
திருநெல்வேலி : மாவட்டம், பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் நேற்று (ஜூலை 28, 2025) ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ்…
ஸ்ரீஹரிகோட்டா : இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ மற்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா இணைந்து உருவாக்கிய…
மான்செஸ்டர் : இந்தியா-இங்கிலாந்து நான்காவது டெஸ்ட் போட்டி (ஜூலை 27, 2025) ட்ராவில் முடிந்த பிறகு, இந்திய அணியின் பயிற்சியாளர்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (30-07-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால்…
திருநெல்வேலி : மாவட்டம், ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த கவின் செல்வ கணேஷ் (வயது 27), சென்னையில் பிரபல ஐ.டி. நிறுவனமான டி.சி.எஸ்-இல்…