DK Shivakumar [Image source : PTI]
வாக்கு எண்ணும் மையத்தில் பாஜக எம்.பி அனுமதிக்கப்பட்டதாக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் குற்றம் சாட்டினார்.
கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் 135 தொகுதிகளில் காங்கிரஸ் தனிப்பெரும்பாண்மையுடன் வெற்றி பெற்றாலும். ஒரு தொகுதியில் நள்ளிரவு வரை தேர்தல் முடிவு இழுபறியாகி சென்று முதலில் காங்கிரஸ் வெற்றி என அறிவிக்கப்பட்டு பின்னர் பாஜக வென்றதாக அறிவிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.
ஜெயா நகர் தொகுதியில் பாஜகவின் சி.கே.ராமமூர்த்தியும், காங்கிரஸ் சார்பில் சௌமியா ரெட்டியும் போட்டி போட்டனர். இதில் ஆரம்பத்தில் இருந்து இழுபறியாக சென்று கொண்டிருந்த நிலையில் முன்னிலை மாறி மாறி வந்து இடையில் சுமார் 290 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றி என அறிவிக்கப்பட்டு பின்னர் பாஜகவினர் மறு வாக்கு எண்ணிக்கை வேண்டும் என கேட்கவே, மறு வாக்கு எண்ணிக்கை நடத்தி 16 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் ராமமூர்த்தி வெற்றி பெற்றார் என அறிவிக்கப்பட்டது.
அந்த சமயம் ஜெயா நகர் பகுதியில் டி.கே.சிவகுமார் வாக்கு எண்ணும் மையத்தில் தர்ணாவில் ஈடுபட்டதால் அங்கு பரபரான சூழல் நிலவியது. இதுபற்றி சிவகுமார் கூறுகையில், வாக்கு எண்ணும் மையத்தில் பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா அனுமதிக்கப்பட்டதாக குற்றம் சாட்டினார். அதன் பிறகு தான் 16 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதாகவும் காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவகுமார் குற்றம் சாட்டினார்.
திருநெல்வேலி : மாவட்டம், பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் நேற்று (ஜூலை 28, 2025) ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ்…
ஸ்ரீஹரிகோட்டா : இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ மற்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா இணைந்து உருவாக்கிய…
மான்செஸ்டர் : இந்தியா-இங்கிலாந்து நான்காவது டெஸ்ட் போட்டி (ஜூலை 27, 2025) ட்ராவில் முடிந்த பிறகு, இந்திய அணியின் பயிற்சியாளர்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (30-07-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால்…
திருநெல்வேலி : மாவட்டம், ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த கவின் செல்வ கணேஷ் (வயது 27), சென்னையில் பிரபல ஐ.டி. நிறுவனமான டி.சி.எஸ்-இல்…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகைத் திருட்டு…