#Breaking:காங்கிரஸ் தலைவர் இந்திரா ஹிருதயேஷ் காலமானார்- அரசியல் தலைவர்கள் இரங்கல்…!

Published by
Edison
  • காங்கிரஸ் தலைவர் இந்திரா ஹிருதயேஷ் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார்.
  • அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி,காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட பிற கட்சி அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

உத்தரகாண்ட் மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினரும்,காங்கிரஸ் தலைவருமான தலைவருமான இந்திரா ஹிருதயேஷ்(வயது 80),சனிக்கிழமையன்று டெல்லியில் நடந்த கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டார்.

இந்நிலையில்,திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக இன்று இந்திரா ஹிருதயேஷ் காலமானார்.

இதனையடுத்து,அவரது மறைவிற்கு காங்கிரஸ் கட்சி மற்றும் பிற அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில்,இந்திரா ஹிருதயேஷ் அவர்களின் மறைவிற்கு,இரங்கல் தெரிவித்து காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி கூறியதாவது: “உத்தரகண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் வலுவான இணைப்பான டாக்டர் இந்திரா ஹிருதயேஷ் ஜி மறைந்த சோகமான செய்தியை கேள்விப்பட்டேன்.பொது சேவை மற்றும் காங்கிரஸ் கட்சிக்காக அவர் கடைசி வரை பணியாற்றினார்.அவரது சமூக மற்றும் அரசியல் பங்களிப்புகள் ஒரு உத்வேகம்.அவரின் அன்புக்குரியவர்களுக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன்”,என்று தெரிவித்தார்.

அவரை தொடர்ந்து,இந்திரா ஹிருதயேஷ் அவர்களின் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.மேலும்,இது குறித்து பிரதமர் அலுவலகம் டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:”டாக்டர் இந்திரா ஹிருதயேஷ் ஜி பல சமூக சேவை முயற்சிகளில் முன்னணியில் இருந்தார். அவர் ஒரு திறமையான சட்டமன்ற உறுப்பினராகவும், சிறந்த நிர்வாக அனுபவம் உடையவராகவும் இருந்தார்.எனவே,அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். ஓம் சாந்தி”,என்று பிரதமர் மோடி கூறியதாக தெரிவித்துள்ளது.

Published by
Edison

Recent Posts

”இனி அறிக்கை விடக்கூடாது” – ரவி மோகன், ஆர்த்திக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

”இனி அறிக்கை விடக்கூடாது” – ரவி மோகன், ஆர்த்திக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

சென்னை : நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ரவியின் விவாகரத்து செய்தி ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

6 minutes ago

வானத்தில் குலுங்கிய விமானம்.. அனுமதி கேட்ட இந்தியா.. அனுமதி மறுத்த பாகிஸ்தான்! – திடுக்கிடும் தகவல்

டெல்லி : கடந்த 21-ம் தேதி டெல்லியில் இருந்து ஸ்ரீநகருக்கு 220 பேருடன் புறப்பட்ட 6E 2142 இண்டிகோ விமானம்…

1 hour ago

மழையோ மழை: 3 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.., 2 நாட்களுக்கு ரெட் அலர்ட்.!

சென்னை : தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த இரண்டு தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது.   இதனிடையே, அரபிக்கடலில் நிலவி வரும் குறைந்த…

2 hours ago

டெல்லியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.., திமுகவினர் உற்சாக வரவேற்பு!

டெல்லி : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நாளை (மே 24, 2025) நடைபெறவுள்ள நிதி…

2 hours ago

“தண்ணீரை நிறுத்தினால் உங்கள் மூச்சை நிறுத்துவோம்” இந்தியாவுக்கு எச்சரிக்கை விட்ட பாக். ராணுவ செய்தித் தொடர்பாளர்!

இந்தியா vs பாகிஸ்தான் போர் பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு வந்த நிலையில், பாகிஸ்தான் அத்துமீறினால் நாங்கள் அதற்கு பதிலடி கொடுப்போம்…

5 hours ago

போர் நிறுத்தம் அமெரிக்காவுக்கு தொடர்பு இல்லை..மீண்டும் விளக்கம் கொடுத்த அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இடையே நடந்த போர் நின்றதற்கு நான் தான் காரணம் என அமெரிக்க அதிபர்…

9 hours ago