மணிப்பூர் வன்முறை : இதுதான் அமைதியா.? பிரதமர் மோடியை விமர்சித்த மாநிலங்களவை எம்பி கபில் சிபில்.!

Published by
மணிகண்டன்

மணிப்பூரில் கலவரம் நடந்து கொண்டு இருக்கும் போது காங்கிரசை பிரதமர் அமைதியின் எதிரி என கூறுகிறார். – கபில் சிபில் டிவிட்டரில் கடும் விமர்சனம்.

மணிப்பூர் மாநிலத்தில் தற்போது வன்முறை அதிகமாகி கொண்டு இருக்கிறது. அங்கு வசிக்கும் ஒரு பிரிவினரை எஸ்டி பிரிவில் சேர்க்க அரசு முன்னெடுத்த போது, அதற்கு இன்னொரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு பிரிவினர் இடையே வன்முறை ஏற்பட்டுள்ளது. இதனால் மணிப்பூர் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

தற்போது இந்த சம்பவங்கள் குறித்து மூத்த வழக்கறிஞரும் மாநிலங்களவை எம்பியுமான கபில் சிபில் தனது டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடியை விமர்சித்து தனது கருத்தை பதிவிட்டுள்ளார். அதில், பிரதமர் மோடி கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் கட்சியை பார்த்து ‘அமைதிக்கு எதிரானவர்கள்’ என்று குறிப்பிடுகிறார். ஆனால், அதே வேளையில் இங்கு மணிப்பூர் எரிந்து கொண்டிருக்கிறது. தேவாலயங்கள் எரிக்கப்படுகின்றன. மாணவர்கள் வன்முறையில் ஈடுபடுகிறார்கள், என குறிப்பிட்டுள்ளார் .

மேலும் , 2014 முதல் 2022 வரை 5415 ஜாதி கலவரங்கள் இந்தியாவில் நடைபெற்றுள்ளன. உத்தர பிரதேசத்தில் 10900 என்கவுண்டர்கள் நடைபெற்றுள்ளன.  என குறிப்பிட்டு பாஜக எதனை அமைதி என்கிறது என கேள்வி எழுப்பி உள்ளார். மாநிலங்களவை எம்.பி கபில் சிபில் பதிவிட்ட இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகி உள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!

பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…

54 minutes ago

தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் வெட்டிக் கொலை.!

காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

2 hours ago

5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…

2 hours ago

“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

3 hours ago

”நாய் கடித்து தாமதமாக சிகிச்சைக்கு வந்தால் உயிருக்கு ஆபத்து”- தமிழ்நாடு சுகாதாரத்துறை எச்சரிக்கை!

சென்னை : தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் நாய் கடியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.80 லட்சத்தை தொட்ட நிலையில் 18…

3 hours ago

நிக்கிதா குறித்து வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்.., தலைமறைவாகி ஊர் ஊராக பதுங்கல்.!

சிவகங்கை : திருப்புவனம் அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது, பல பண மோசடி…

4 hours ago