மணிப்பூர் வன்முறை : இதுதான் அமைதியா.? பிரதமர் மோடியை விமர்சித்த மாநிலங்களவை எம்பி கபில் சிபில்.!

Published by
மணிகண்டன்

மணிப்பூரில் கலவரம் நடந்து கொண்டு இருக்கும் போது காங்கிரசை பிரதமர் அமைதியின் எதிரி என கூறுகிறார். – கபில் சிபில் டிவிட்டரில் கடும் விமர்சனம்.

மணிப்பூர் மாநிலத்தில் தற்போது வன்முறை அதிகமாகி கொண்டு இருக்கிறது. அங்கு வசிக்கும் ஒரு பிரிவினரை எஸ்டி பிரிவில் சேர்க்க அரசு முன்னெடுத்த போது, அதற்கு இன்னொரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு பிரிவினர் இடையே வன்முறை ஏற்பட்டுள்ளது. இதனால் மணிப்பூர் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

தற்போது இந்த சம்பவங்கள் குறித்து மூத்த வழக்கறிஞரும் மாநிலங்களவை எம்பியுமான கபில் சிபில் தனது டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடியை விமர்சித்து தனது கருத்தை பதிவிட்டுள்ளார். அதில், பிரதமர் மோடி கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் கட்சியை பார்த்து ‘அமைதிக்கு எதிரானவர்கள்’ என்று குறிப்பிடுகிறார். ஆனால், அதே வேளையில் இங்கு மணிப்பூர் எரிந்து கொண்டிருக்கிறது. தேவாலயங்கள் எரிக்கப்படுகின்றன. மாணவர்கள் வன்முறையில் ஈடுபடுகிறார்கள், என குறிப்பிட்டுள்ளார் .

மேலும் , 2014 முதல் 2022 வரை 5415 ஜாதி கலவரங்கள் இந்தியாவில் நடைபெற்றுள்ளன. உத்தர பிரதேசத்தில் 10900 என்கவுண்டர்கள் நடைபெற்றுள்ளன.  என குறிப்பிட்டு பாஜக எதனை அமைதி என்கிறது என கேள்வி எழுப்பி உள்ளார். மாநிலங்களவை எம்.பி கபில் சிபில் பதிவிட்ட இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகி உள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

23 minutes ago

ரசிகர்கள் ஷாக்: டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ரோஹித் சர்மா.!

மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…

2 hours ago

”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…

2 hours ago

KKR vs CSK : வெற்றி பெருமா சென்னை.? பிளே ஆஃப் வாய்ப்பை பெருமா கொல்கத்தா.? டாஸ் விவரம் இதோ.!

கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…

2 hours ago

பஹல்காம் தாக்குதல்: பொதுமக்களிடம் இதெல்லாம் உள்ளதா.? என்ஐஏ வேண்டுகோள்.!

டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…

3 hours ago

IND Vs PAK.. போர் பதற்றம்.., ஐபிஎல் தொடர் கைவிடப்படுகிறதா..? பிசிசிஐ விளக்கம்!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…

3 hours ago