[Representative Image]
கர்நாடகாவில் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் பெங்களுருவில் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பெங்களுருவில் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டிய 5 பேர் தீவிரவாதிகளா? என பெங்களூரு குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சையத் சுஹெல், உமர், ஜானித், முதாசிர், ஜாஹித் ஆகியோரை பெங்களூரு குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பெங்களுரு நகரில் வெடிகுண்டு தாக்குதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட சதி திட்டம் தீட்டியது விசாரணையில் அம்பலமானது.
கைதான 5 பேரும் 2017ல் நடந்த கொலை வழக்கில் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர் எனவும் கூறப்படுகிறது. சிறையில் இருந்தபோது தீவிரவாதிகளுடன் தொடர்பு ஏற்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. பெங்களுருவில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் கடந்த இரண்டு நாட்கள் நடைபெற்ற நிலையில், தற்போது பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 5 பேர் கைது செய்யப்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
டெல்லி : வருகின்ற ஜூன் 20 ஆம் தேதி தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான…
சென்னை : டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். முன்னதாக,…
டெல்லி : 'Son of Sardaar', 'Jai Ho' 2 என 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள பிரபல பாலிவுட்…
கேரளா : கேரளாவில் 8 நாட்கள் முன்கூட்டியே தென்மேற்கு பருவ மழைத் தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD)…
சென்னை : அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது .கோவை,…
ஜெய்ப்பூர்: ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றது. இந்த…