நிச்சயம் செய்யப்பட்ட நிலையில் மணமகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மத்திய பிரதேச மாநிலத்தில் மணமகளும் பிபிஇ உடையணிந்து அக்னியை வலம் வந்து திருமணம் செய்துள்ளனர்.
நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டேதான் செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. கொரோனவால் இறப்பவர்கள் ஒருபுறம் இருக்க, மறுபுறம் ஆக்சிஜன் இல்லாமலும் மருத்துவமனையில் படுக்கை வசதிகள் இல்லாமலும் சிகிச்சை பெறமுடியாமல் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலத்திலும் கொரோனாவின் தாக்கம் அதிகளவில் காணப்படுகிறது. கொரோனாவுக்கு மத்தியிலும் ஏற்கனவே முன் குறிக்கப்பட்ட திருமணங்களும் நடந்து வருகிறது ஆனால் கொரோனா பாதிக்கப்பட்ட நபருக்கே திருமணம் மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்று உள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் ரட்லம் நகரில் வசித்து வரக்கூடிய ஒருவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு நிச்சயம் நடைபெற்று முடிந்த பின்பு மணமகனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டாலும் திருமணத்தை நிறுத்தி விட மனமில்லாமல் திருமண வீட்டார் கொரோனா தொற்று இருந்தாலும், பாதுகாப்பாக இருக்க பயன்படுத்தக் கூடிய பிபிஇ உடையணிந்து திருமணம் செய்துள்ளனர். பிபிஇ உடையுடன் மணமகன் மற்றும் மணமகள் அக்னியை வலம் வந்து திருமணம் செய்து கொள்ளும் வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…