நிச்சயம் செய்யப்பட்ட நிலையில் மணமகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மத்திய பிரதேச மாநிலத்தில் மணமகளும் பிபிஇ உடையணிந்து அக்னியை வலம் வந்து திருமணம் செய்துள்ளனர்.
நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டேதான் செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. கொரோனவால் இறப்பவர்கள் ஒருபுறம் இருக்க, மறுபுறம் ஆக்சிஜன் இல்லாமலும் மருத்துவமனையில் படுக்கை வசதிகள் இல்லாமலும் சிகிச்சை பெறமுடியாமல் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலத்திலும் கொரோனாவின் தாக்கம் அதிகளவில் காணப்படுகிறது. கொரோனாவுக்கு மத்தியிலும் ஏற்கனவே முன் குறிக்கப்பட்ட திருமணங்களும் நடந்து வருகிறது ஆனால் கொரோனா பாதிக்கப்பட்ட நபருக்கே திருமணம் மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்று உள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் ரட்லம் நகரில் வசித்து வரக்கூடிய ஒருவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு நிச்சயம் நடைபெற்று முடிந்த பின்பு மணமகனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டாலும் திருமணத்தை நிறுத்தி விட மனமில்லாமல் திருமண வீட்டார் கொரோனா தொற்று இருந்தாலும், பாதுகாப்பாக இருக்க பயன்படுத்தக் கூடிய பிபிஇ உடையணிந்து திருமணம் செய்துள்ளனர். பிபிஇ உடையுடன் மணமகன் மற்றும் மணமகள் அக்னியை வலம் வந்து திருமணம் செய்து கொள்ளும் வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…