திருப்பதி கோயிலில் மேலும் 91 ஊழியர்களுக்கு கொரோனா.
திருப்பதி ஏழுமலையான் கோவில் கடந்த மாதம் 11ம் தேதி முதல் பக்தர்களுக்கு அனுமதிக்கப்பட்டு நாளொன்றுக்கு 10 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறது. ஆந்திராவில் வெங்கடேஸ்வரர் சன்னதி அமைந்துள்ள அலிபிரி மற்றும் திருமலை ஆகிய இடங்களில் ஊழியர்கள் மீது கொரோனா சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று சிங்கால் கூறினார். தினமும் சீரற்ற மாதிரிகளை சேகரிப்பதன் மூலமும் பார்வையாளர்கள் சோதிக்கப்படுகிறார்கள் என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில் திருப்பதி கோயிலில் மேலும் 91 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஜூலை 10 ஆம் தேதி வரை மொத்தம் 3,569 ஊழியர்கள் சோதனை செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 18 முதல் 25 வரை, 700 பார்வையாளர்கள் பரிசோதிக்கப்பட்டதாகவும், அவர்களில் யாரும் கொரோனா இல்லை என்றும் கோவில் தரப்பில் கூறப்படுகிறது. இந்த கோவிலுக்கு கடந்த மாதத்தில் ரூ.16.73 கோடி வசூல் கிடைத்துள்ளது என்று டி.டி.டி தெரிவித்துள்ளது.
இரண்டு மாதங்களுக்கும் மேலாக தொற்றுநோயால் மூடப்பட்ட நிலையில், ஜூன் 11 முதல் திருமலை கோயில் பார்வையாளர்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டது. உலகின் மிகவும் பிரபலமான இந்து ஆலயங்களில் ஒன்றான இந்த கோயில் வழக்கமாக தினசரி 50,000 முதல் 1 லட்சம் பார்வையாளர்களைப் பெறுகிறது. தொற்றுநோய் காரணமாக, தினசரி பார்வையாளர்களின் எண்ணிக்கை முதலில் 6,000 ஆக இருந்தது, பின்னர் அதிகபட்சமாக 12,000 ஆக அதிகரித்தது.
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…