உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா நகரில் உள்ள ஒரு எஸ்.என். மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளி ஒருவர் தான் பான் மசாலா சாப்பிட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தெரியாமல் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் இருந்து தப்பினார்.
பின்னர், பான் கடைக்கு சென்று பான் மசாலா பாக்கெட்டுகளை வாங்கி தனது சட்டைப் பையில் நிரப்பி வைத்துக்கொண்டு, அவர் தனது நண்பரின் வீட்டிற்குச் சென்றுள்ளார். ஆனால், தனது நண்பரிடம் தனக்கு கொரோனா இருப்பதாகக் கூறாமல் அவர்களுடன் நேரத்தை செலவு செய்துள்ளார்.
இதையடுத்து, தப்பிய அந்த நபரை தேடிவந்த அதிகாரிகள் அவரின் நண்பரின் குடும்பத்தினரை அழைத்து, இவர் கொரோனா நோயாளி என்று அவர்களுக்கு தெரிவித்தனர். இதையடுத்து, கொரோனா நோயாளி தனது நண்பரின் வீட்டில் இருந்து அதிகாரிகள் அவரைப் பிடித்து தனிமை வார்டுக்கு அழைத்துச் சென்றனர்.
கொரோனா நோயாளி தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக எஸ்.என் மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் தெரிவித்தனர். தப்பி ஓடிய கொரோனா நோயாளியின் நண்பரின் குடும்பமும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பித்தக்கது.
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மருமகள் சௌமியா அன்புமணி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு…
விருதுநகர் : மாவட்டம், அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்ட லிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் திருக்கோயில் மற்றும்…
திருவள்ளூர் :மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம்…
சென்னை : டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் இன்றயை வானிலை தொடர்பான தகவலை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த தகவலின் படி, தென்மேற்கு…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான 12 நாள் மோதலின்போது, இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பு காமெனியை குறிவைத்து தாக்குதல் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால்…