ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய கொரோனா தடுப்பூசி ஒரு டோஸ் விலை ரூ .1000 என்று ஆதார் பூனவல்லா தெரிவித்தார்.
உலக முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த கொரோனா வைரசால் பல உலக நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. ககொரோனா தடுக்க மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல நாடுகள் தீவிரம் காட்டி வருகிறது.
சமீபத்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் இங்கிலாந்தை தளமாகக் கொண்ட பயோஃபார்மா நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா கொரோனாவுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடித்துள்ளது. தானாக முன்வந்த 1077 தன்னாலர்வர்கள் மீது கொரோனா தொற்று செலுத்தப்பட்டது. அதன்பின், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த தடுப்பு மருந்தை அவர்கள் மீது செலுத்தியது.
இந்த தடுப்பூசி செலுத்தப்பட்ட 1077 தன்னாலர்வர்கள் கொரோனா எதிர்ப்பு ஆற்றல் கிடைத்திருப்பதாக அவர்கள் நடத்திய சோதனை முடிவில் தெரியவந்ததாக கண்டறியப்பட்டது. இந்நிலையில், இந்தியாவில் உள்ள புனேவை தலைமை இடமாக கொண்ட சீரம் இன்ஸ்டிடியூட் ஆக்ஸ்போர்டு தடுப்பு மருந்து பரிசோதனைக்கான அனுமதி கேட்டு மத்திய அரசிடம் விண்ணப்பித்து உள்ளது.
இதுகுறித்து, சீரம் இன்ஸ்டிடியூட் தலைமை நிர்வாக இயக்குனர் ஆதார் பூனவல்லா கூறுகையில், ஆகஸ்ட் மாதம் 4,000-5,000 தன்னார்வலர்களுடன் இந்தியாவில் கொரோனா தடுப்பூசியின் மூன்றாம் கட்ட மனித மருத்துவ பரிசோதனைகளை இந்தியாவில் தொடங்கும் என்று அவர் கூறினார்.
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் நடத்தப்பட்ட பரிசோதனையில் வயதானவர்களை அவர்கள் தேர்வு செய்யவில்லை எனவே இந்தியாவில் நடத்தப்பட்ட பரிசோதனையில் வயதானவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என கூறப்படுகிறது.
கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மும்பை, புனே நகரில் இருந்து தங்கள் தேர்வுசெய்வர்கள் என கூறப்படுகிறது. இந்த தடுப்பூசியின் விலை ரூ.1000 இருக்கும் என சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் அறிவித்துள்ளது.
சவூதி : உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவுதி ப்ரோ லீக் அணியான அல் நசார் கால்பந்து…
சென்னை : 2026-ல்தமிழகத்தில் நிச்சயம் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும், அதில் பாஜகவும் அங்கம் வகிக்கும் என அமித்…
சென்னை : தமிழக வெற்றிக்கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம், அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் வருகிற ஜூலை 4ம் தேதி…
லாஸ் ஏஞ்சல்ஸ் : 98வது அகாடமி விருதுகள் வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் 15ம் தேதி 6 அன்று…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள 'கூமாபட்டி' கிராமம் திடீரென ரீல்ஸ்களில் வைரலாக தொடங்கியது. 'இந்த பக்கம்…
திருவனந்தபுரம் : கேரளாவில் பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாலும், அணைகள் திறக்கப்படுவதாலும் அம்மாநிலம் முழுவதும்…