விரைவில் 2 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி – எய்ம்ஸ் இயக்குனர்!

Published by
Rebekal

விரைவில் இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்குக்கான கோவாக்சின் தடுப்பூசி செயல்பாட்டிற்கு வரும் என எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், தற்பொழுது கொரோனா மூன்றாம் அலை விரைவில் வர உள்ளதாக அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த கொரோனா மூன்றாம் அலையில் குழந்தைகள் தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே குழந்தைகளுக்கும் தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வரும் நிலையில், அரசு சார்பிலும் இதற்கான பல்வேறு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்த ஆய்வுகளும் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசியை குழந்தைகளுக்கு செலுத்துவதற்கான பரிசோதனை தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இதுகுறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரன்தீப் குலேரியா அவர்கள் கூறுகையில் இரண்டு முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி குறித்த இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனை நடத்த கடந்த மே 16-ம் தேதியை இந்திய மருந்து கட்டுப்பாடு அமைப்பு அனுமதி அளித்ததாக கூறியுள்ளார்.

மேலும் இன்னும் இரண்டு மூன்று மாதங்களுக்குள் குழந்தைகளுக்கான தடுப்பூசி கிடைப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் பாரத் பயோடெக் நிறுவனத்துடன் சேர்ந்து பிற நிறுவனங்களும் குழந்தைகளுக்கான தடுப்பூசி குறித்த பரிசோதனையில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

கில் மாதிரி விளையாட ஆசைப்படுகிறேன்…சாதனை படைத்த வைபவ் சூர்யவம்சி பேச்சு!

கில் மாதிரி விளையாட ஆசைப்படுகிறேன்…சாதனை படைத்த வைபவ் சூர்யவம்சி பேச்சு!

லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…

8 hours ago

மஸ்கின் கட்சியில் இந்த மூன்று அமெரிக்கர்கள் இணைவார்கள்! ட்ரம்ப் ஆதரவாளர் லாரா லூமர் கணிப்பு!

வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…

8 hours ago

மடப்புரம் அஜித் சகோதரர் நவீன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி! என்ன காரணம்?

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…

9 hours ago

2 கோடி உறுப்பினர்களை சேர்க்க த.வெ.க மும்முரம்… ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு!

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…

10 hours ago

சுப்மன் கில் பேட்டிங் பார்த்து சோர்ந்துட்டோம்! அரண்டு போன இங்கிலாந்து பயிற்சியாளர்!

பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…

12 hours ago

தூத்துக்குடி விமானத்தில் இயந்திர கோளாறு! அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தம்!

தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…

13 hours ago