கொரோனா வைரஸ் ஒரு நோய் அல்ல! நம்முடைய பாவங்களுக்காக கடவுள் கொடுத்த தண்டனை! – சமாஜ்வாதி கட்சி எம்.பி

Published by
லீனா

கொரோனா வைரஸ் ஒரு நோய் அல்ல, ஆனால் நம்முடைய பாவங்களுக்கு கடவுள் கொடுத்த தண்டனை.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், சமாஜ்வாதி கட்சி எம்.பி.ஷபிகுர் ரஹ்மான் இணையத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், கொரோனா வைரஸ் ஒரு நோய் அல்ல, ஆனால் நம்முடைய பாவங்களுக்கு கடவுள் கொடுத்த தண்டனை. கொரோனா வைரஸ் நெருக்கடியிலிருந்து வெளியேறுவதற்கான சிறந்த வழி சர்வவல்லவரிடம் மன்னிப்பு கோருவது தான் என தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த வீடியோவில், பக்ரீத் தினத்தன்று, சந்தைகளை திறக்க வேண்டும். இதனால் மக்கள் விலங்குகளை அங்கிருந்து வாங்க முடியும். கொரோனா வைரஸை முடிவுக்குக் கொண்டுவர மக்கள் பிரார்த்தனை செய்ய மசூதிகள் மற்றும் ஈட்காக்கள் திறக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும், இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ‘கொரோனா வைரஸ் ஒரு நோய் அல்ல, ஆனால் நம்முடைய பாவங்களுக்கு கடவுள் கொடுத்த தண்டனை என்று மீண்டும் வலியுறுத்தினார். மசூதியில் பிரார்த்தனை செய்ய நிர்வாகம் அனுமதித்தால், எல்லோரும் சமூக இடைவெளி விதிமுறைகளைப் பின்பற்றுவதையும், பிரார்த்தனை செய்யும் போது முககவசம் அணிவதையும் உறுதி செய்வோம். அவர்கள் அனுமதிக்காவிட்டால், நாங்கள் எங்கள் வீடுகளிலிருந்து ஒரு பிரார்த்தனை செய்வோம். மக்கள் மத்தியில் ஒத்துழைப்பு தேவை என்று அவர் தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

2 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

4 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

7 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

8 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

10 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

10 hours ago