உஷார்!கொடூரன் குறித்து வாட்ஸ்அப்..பேஸ்புக்கில் வதந்திகளை பரப்பினால் 1 ஆண்டு சிறை..அபராதம்!

Published by
kavitha

கொரோனா வைரஸ் குறித்த தேவையற்ற வதந்திகளையும், பொய்யான தகவல்களையும் பரப்புவோர்களை கைது செய்வதுடன் ஓர் ஆண்டு காலம் சிறையில் அடைக்கப்படுவார்கள் என ஹைதராபாத் போலீஸார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதிலும் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வருகிறது.இந்நிலையில் இந்தியாவிலும் பரவி இந்த வைரஸ்க்கு 2 பேர் பலியாலியுள்ளனர்.107 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.இந்நிலையில் பாதிப்பைத் தடுக்கும் வகையில் பள்ளி, கல்லூரி, திரையரங்குகள், விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட அனைத்திற்கும்  தெலுங்கானா அரசு மார்ச் 31ந்தேதி தேதிவரை தடை விதித்ததுள்ளது.இதே போல் தமிழ்நாடு,கர்நாடாகம்,கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. 

இந்நிலையில் ஹைதராபாத் நகர போலீஸ் ஆணையர் அஞ்சானி குமார் எச்சரிக்கையை விடுத்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர் கொரோனா வைரஸ்  பரவுவதைத் தடுக்க தெலுங்கானா அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.ஆனால், சிலர் சமூக ஊடகங்கள் வாயிலாக கொரோனா வைரஸ் குறித்த தவறான தகவல்களையும், வதந்திகளையும் மக்கள் மத்தியில் பரப்பி அவர்களை பீதியையும் , அச்சத்தையும் ஏற்படுத்தி வருகிறார்கள்.இவ்வாறு கொரோனா குறித்த தவறான வதந்திகளையும், பொய்யான தகவல்களையும் வாட்ஸ்அப், ஃபேஸ்புக்  போன்ற சமூக ஊடகங்களில் பரப்புவோர் மீது தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஓர் ஆண்டு கால சிறையும், அபராதமும் விதிக்க முடியும் என்று தெரிவித்தார்.

மேலும் அவர் பொது மக்களை அச்சத்தில் ஆழ்த்தும் வகையில் கொரோனா குறித்த தவறான தகவல்கள், எச்சரிக்கைகள், அதன் பாதிப்புகள், அதன் பரவல் குறித்து வதந்திகளைப் பரப்பினால் பேரிடர் மேலாண்மை சட்டம் பிரிவு 58ன்படி கைது செய்யப்படுவார்கள் என்ற  கூடுதல் தகவலையும்  தெரிவித்தார்.இதற்கிடையில் அம்மாநில முதல்வர்  முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் விடுத்த அறிவிப்பில், ” ஊடகங்கள் கொரோனா குறித்த உறுதிப்படுத்தப்படாத எந்தவொரு தகவலையும்  உடனடியாக ஏதும் செய்திகள் வெளியிட வேண்டாம் என்றும் மாநில சுகாதாரத்துறை அறிவிக்கும் செய்திகள் மட்டும் செய்தி வெளியிட்டால் போதுமானது. தவறான செய்திகளை வெளியிடுவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று  தெரிவித்துள்ளார்

Recent Posts

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…

4 hours ago

”தமிழக மீனவர்களை மீட்க” – அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…

4 hours ago

போலீஸ் காவலில் மரணம்.., காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்க – தவெக.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

5 hours ago

போலீஸ் காவலில் மரணம்.., ஜெய்பீம் படம் பார்த்த முதல்வர் எங்கே? – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…

5 hours ago

பூரி ரத யாத்திரை கூட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழப்பு.., ரூ.25 லட்சம் நிவாரணம்.!

ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…

5 hours ago

”மின் கட்டண உயர்வு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்” – அமைச்சர் சிவசங்கர்.!

சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…

8 hours ago