இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது அதிகரித்து வரும் நிலையில் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டுமென்று சாலையில் வட்டம் போட்டு காட்டி மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி சமுக இடைவெளியை அறிவுறுத்தி உள்ளார்.இந்தியாவில் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டாலும் மக்களின் அத்தியாவசிய பொருட்கள் விற்க தடைஇல்லை என்றும் அறிவிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் கூட்டம் கூடக்கூடாது என்றும், அவர்கள் குறைந்தபட்சம் 1மீ இடைவெளி விட்டு இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மேற்குவங்க முதல்வர் மம்தா பேனர்ஜி அவர்கள் ஊரடங்கு உத்தரவு நடைமுறையை நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது கொல்கத்தாவின் ஜன் பஷார் பகுதிக்கு சென்ற அவர் வர்த்தகர்கள், விற்பனையாளர்களிடம் ஆய்வு செய்தார். அப்போது அத்தியவாசிய பொருட்கள் வாங்கும் வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டுமென்று சாலையில் செங்கல் கல்லை எடுத்து வட்டமிட்டார். பொதுமக்களின் நலனுக்காக சாலையில் அவரே செங்கலால் வட்டமிட்ட செயலை பொதுமக்கள் பலரால் வெகுவாக பாராட்டப்பட்டு வருகின்றனர்
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…