Categories: இந்தியா

அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிப்பு!

Published by
பாலா கலியமூர்த்தி

Arvind Kejriwal: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிப்பு.

டெல்லியில் கொண்டுவரப்பட்டு பின்னர் திரும்பி பெறப்பட்ட புதிய மதுபான கொள்கை வழக்கில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்கள் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடிய ஒரு வருடத்திற்கு மேலாக திகார் சிறையில் இருந்து வருகிறார்.

இதன்பின் மதுமான கொள்கை முறைகேடு தொடர்பான கொள்கை முறைகேடு வழக்கில் தெலங்கானா முன்னாள் முதல்வர் கேசிஆர் மகளும், பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியின் எம்எல்சியுமான கே.கவிதா கடந்த மாதம் 15ம் தேதி அமலாக்கத்துறை கைது செய்த நிலையில், சமீபத்தில் சிபிஐயும் அவரை கைது செய்தது.

தற்போது கவிதா நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லியின் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் அதே வழக்கில் கடந்த மாதம் 21ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். ஒருவார அமலாக்கத்துறை விசாரணைக்கு பின்னர் தற்போது அவரும் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தேர்தல் நேரத்தில் டெல்லி முதல்வர் கைது செய்யப்பட்டு காவலில் சிறைக்கு அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஏற்கனவே, கைதாகி சிறையில் உள்ள கவிதாவின் நீதிமன்ற ஏப்ரல் 23 வரை நீடிக்கப்பட்ட நிலையில், தற்போது கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலும் ஏப்.23 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கெஜ்ரிவாலுக்கு ஏற்கனவே வழங்கப்பட 15 நாட்கள் நீதிமன்றம் காவல் முடிவடைந்த நிலையில், மேலும் 8 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, அமலாக்கத்துறை கைது மற்றும் காவலில் வைக்கப்பட்டதை எதிர்த்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு ஏப்ரல் 24ம் தேதிக்குள் பதிலளிக்க  அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

போர் நிறுத்த உடன்படிக்கைக்கு ஒப்புதல்: ‘மீறினால் பதில் தாக்குதல் நடத்தப்படும்’ – இஸ்ரேல் அறிவிப்பு.!

இஸ்ரேல் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சண்டை நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. போர் நிறுத்தத்திற்கு…

3 minutes ago

‘இஸ்ரேல் உடனான போர் நிறுத்தம்’ – ஈரான் ஊடகம் அறிவிப்பு.!

ஈரான் : இஸ்ரேல் உடன் போர் நிறுத்தத்திற்கு ஈரான் ஒப்புக் கொண்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் அறிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல்…

32 minutes ago

ஈரானை அமெரிக்கா தாக்கியது எப்படி.? B2 போர் விமானங்களை எவ்வாறு கையாண்டனர்? உணவு பழக்கம் என்ன?

வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…

3 hours ago

நடிகர் ஸ்ரீகாந்தை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு.! அடுத்த சிக்கப்போவது யார் யார்.?

சென்னை : போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து…

3 hours ago

இங்கிலாந்தை வீழ்த்தி முதல் வெற்றியை பெறுமா இந்தியா.? வீர்கள் என்ன செய்ய வேண்டும்?

லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…

4 hours ago

கத்தாரில் அமெரிக்கா ராணுவ தளம் மீது தாக்குதல்.., ”ஏவுகணைகளை இடைமறித்து அழித்தோம்” – கத்தார் அரசு.!

கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…

5 hours ago