கிரிப்டோகரன்சியால் மிகப்பெரிய ஆபத்து ஏற்பட வாய்ப்பு – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

Published by
Edison

உலக அளவில் கிரிப்டோகரன்சியின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில்,கிரிப்டோகரன்சி மிகப்பெரிய ஆபத்து என்றும் பணமோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவிக்கு அவை பயன்படுத்தப்படலாம் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக,அமெரிக்காவில் நடைபெறும் சர்வதேச நாணய நிதியத்தின் கருத்தரங்கில் பங்கேற்று பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,கூறுகையில்: “எல்லா நாடுகளுக்கும் கிரிப்டோகரன்சி மிகப்பெரிய ஆபத்துதான்.ஏனெனில்,பணமோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதற்காக அத்தகைய நாணயம் பயன்படுத்தப்படும் வகையில் உள்ளது.

இந்த முறைகேடுகளை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒழுங்குபடுத்துவதே ஒரே பதில் என்று நான் நினைக்கிறேன். இதனால்,தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் கட்டுப்பாடு மிகவும் திறமையானதாக இருக்க வேண்டும்”,என்று பேசினார்.

மேலும்,டிஜிட்டல் உலகில் இந்தியாவின் செயல்திறன் மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான மத்திய அரசின் முயற்சிகளை சீதாராமன் எடுத்துரைத்தார்,கொரோனா தொற்றுநோய்களின் போது இந்தியாவில் டிஜிட்டல் பயன்பாட்டு விகிதம் அதிகரித்ததை வலியுறுத்தினார்.

இதற்கு முன்னதாக,மார்ச் மாதம் நடைபெற்ற இந்தியா டுடே மாநாட்டில் நிர்மலா சீதாராமன் பேசுகையில்:”கிரிப்டோகரன்சி அல்லது பிளாக்செயின் மற்றும் ஃபின்டெக் என்று வரும்போது இந்தியா அனைத்து விருப்பங்களையும் நிறுத்தவில்லை.இந்தியாவில் கிரிப்டோகரன்சி விதிமுறைகளை உருவாக்குவது குறித்த அனைத்து விவரங்களையும் வழங்கும் இந்த விஷயத்தில் அமைச்சரவைக் குறிப்பு தயாரிக்கப்பட்டு வருகிறது”,என்று கூறியிருந்தார்.

மேலும்,2022 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி இந்தியாவின் சொந்த டிஜிட்டல் கரன்சியை வெளியிடுவதில் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) செயல்பட்டு வருவதாகவும் மத்திய அமைச்சர் நிர்மலா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Recent Posts

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

2 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

5 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

6 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

8 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

8 hours ago

“நானே போப்பாக இருக்க விரும்புகிறேன்” – டிரம்பின் வைரல் பதிவு.!

நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…

9 hours ago