மிக்ஜாம் புயல்.! தமிழகத்தை தொடர்ந்து ஆந்திராவை புரட்டி போட்ட கனமழை.!

Published by
மணிகண்டன்

சென்னையை புரட்டி போட்ட மிக்ஜாம் புயல் (Michaung Cyclone) கரையை கடக்கும் போது ஆந்திர மாநிலத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் ஆந்திர பிரதேசத்தம் கடற்கரையில் கரையை கடக்கும் என கூறப்பட்டு இருந்தது. அதே போல கரையை கடக்கையில் பலத்த காற்றுடன் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது.

சித்தூர், நெல்லூர், பிரகாசம், குண்டூர், பாபட்லா மற்றும் கிருஷ்ணா ஆகிய 6 மாவட்டங்களில் மிக கனமழை பெய்தது. மேலும் 90 முதல் 110 கிமீ வேகத்தில் காற்றும் வீசியது. புயல் காரணமாக மேற்கு கோதாவரி மற்றும் கோனாசீமா மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. பலத்த காற்றுடன் கனமழை பேய்த்தால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு இருந்தனர்.

இயல்பு நிலைக்கு திரும்பும் சென்னை..! ரயில், விமானம், பேருந்து சேவைகள் மீண்டும் தொடக்கம்.!

கனமழை காரணமாக் கடலோரப் பகுதிகளில் பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் வேரோடு சாய்ந்தன. அவற்றை அகற்றும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடபட்டு இருந்த விளைநிலங்கள் கனமழையில் சேதமடைந்துள்ளன.

புயல் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக புயல் கரையை கடந்து அதிக பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பாபட்லாவில் மட்டும் 50 சிறப்புக் குழுக்களை மாநில அரசு அனுப்பியுள்ளது.  பாபட்லா மாவட்டத்தில் 1,350 பேர் 27 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பாபட்லா மாவட்ட ஆட்சியர் பி ரஞ்சித் பாஷா கூறுகையில், புயலின் தாக்கம் மிகக் கடுமையாக உள்ள 111 கிராமங்களுக்குச் செல்லுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தபட்டுள்ளது. இதனிடையே, வேளாண் துறை அதிகாரிகள் நேரில் சென்று பயிர் சேதங்களை ஆய்வு செய்து வருகின்றனர். ரெபள்ளே, வெமுரு, பாபட்லா, நிஜாம்பட்டினம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் உள்ள மக்கள் யாரும் வெளியே செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டனர் என்று கூறினார்.

புயல் கரையை கடந்த வேளையில், குண்டூர் மாவட்டத்தில் உள்ள சூர்யலங்காவில் கடல் சீற்றமாக மாறியது, 2 மீட்டர் உயரத்தில் அலைகள் எழுந்தன.  புயலின் தாக்கம் காரணமாக, பாபட்லா, ரேபள்ளே, நிஜாம்பட்டினம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளிலும் சில மீட்டர்கள் கடல் கொந்தளிப்பாக இருந்ததாக வானிலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Recent Posts

கட்சிப் பொறுப்பில் இருந்து பாமக எம்.எல்.ஏ நீக்கம் – பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு.!

சென்னை : பாமக தலைவர் பதவி தொடர்பாக ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் நிலவுகிறது. இதனால் அன்புமணி ஆதரவாளர்களை பதவிகளில்…

7 minutes ago

போதைப்பொருள் விவகாரம் – ஸ்ரீகாந்திடம் போலீசார் தீவிர விசாரணை.!

சென்னை : போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை போதைப்பொருள் தடுப்பு…

26 minutes ago

”அண்ணா குறித்து விமர்சனம்.. பாஜகவிடம் அடகுவைக்கப்பட்ட அதிமுக” – சேகர்பாபு கடும் விமர்சனம்.!

சென்னை : நேற்றைய தினம் மதுரையின் வண்டியூர் பகுதியில் உள்ள அம்மா திடலில் ஒரு பிரமாண்டமான முருகன் மாநாடு நடைபெற்றது.…

29 minutes ago

“பவன் கல்யாணுக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன தொடர்பு? சவால் விடுத்த சேகர் பாபு.!

சென்னை : மதுரையில் நேற்றைய தினம் முருக பக்தர்கள் மாநாடு, இந்து முன்னணி மற்றும் பாஜகவின் ஒருங்கிணைப்பில் மிகப் பிரமாண்டமாக…

2 hours ago

ஹார்மூஸ் நீரிணை மூட ஈரான் முடிவு.., உயரும் பெட்ரோல் – டீசல்.? இந்தியாவுக்கு பாதிப்பா.?

ஈரான் : இஸ்ரேல் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்மூஸ் நீரிணையை (ஜலசந்திமூடுவதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இது, ஈரானின்…

3 hours ago

ஜனநாயகன் கடைசி படமா? “விஜய் கூறியது இதுதான்” – மமிதா பைஜு சொன்னது என்ன.?

அயர்லாந்து : இயக்குநர் எச் வினோத் இயக்கிய 'ஜன நாயகன' திரைப்படம் தான் முழுநேர அரசியலில் இறங்குவதற்கு முன் நடிக்கும்…

4 hours ago