3 நாடுகளுக்கு விமான சேவை இயக்க முடிவு.!

Published by
Venu

சீனாவில் பரவதொடங்கிய கொரோனா வைரஸ், தற்பொழுது உலகளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்த வைரஸின் தாக்கத்தால் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

கொரோனா பரவல் காரணமாக, இந்தியாவில் அனைத்து சர்வதேச விமானங்களுக்கு இந்திய அரசு தடை விதித்துள்ள நிலையில், . அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் இந்தியா ‘ஏர் பப்பில்ஸ்’ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது; பல்வேறு இந்திய நகரங்களிலிருந்து இந்த இடங்களுக்கான சர்வதேச விமானங்கள் போக்குவரத்து  மீண்டும் தொடங்கப்படவுள்ளன.

இந்த சர்வதேச விமானப் பயணம் வழக்கமான சர்வதேச பயணங்களைப் போன்றதல்ல என்று சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நாடுகளுக்கு பயணம் செய்ய விரும்புவோர் அதற்கு வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளது .

இந்த நாடுகளில் உள்ள சில விமான நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த யுனைட்டட் ஏர்லைன்ஸ் மற்றும் ஜெர்மனியை சேர்ந்த லுப்தான்சா விமான நிறுவனங்கள் பாதுகாப்பது நடவடிக்கைகளுடன் விமான சேவை இயக்க முடிவு செய்துள்ளது. பிரான்ஸ் மற்றும் ஜெர்மன் நகரங்களுக்கு ஏர் இந்தியா விமான நிறுவனம் விமான சேவையை இயக்க முடிவு செய்துள்ளது. வழக்கமான கட்டணங்களை விட குறைவான கட்டணங்கள் தான் என்றும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

தூதரக அதிகாரிகள் போன்ற வெளிநாட்டவர்களும், இந்திய ஓவர்சீஸ் குடிமக்கள் அட்டை பெற்றவர்களும், இந்தியக் குடிமக்களும் இந்த விமானங்களில் பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியக் குடிமக்கள் பயணிப்பதற்கு போதிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவிற்கு ஜூலை 17 முதல் விமானம்: 

அமெரிக்க விமான சேவையான யுனைடெட் ஏர்லைன்ஸ் ஜூலை 17 முதல் 31-ஆம் வரை இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையே 18 விமானங்களை இயக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி மற்றும் நெவார்க் இடையே யுனைடெட் ஏர்லைன்ஸ் தினமும் விமானம்இயங்கும் என்றும், டெல்லி மற்றும் சான் பிரான்சிஸ்கோ இடையே வாரத்திற்கு மூன்று முறை விமானம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 17 முதல் 31 வரை இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையில் 18 விமானங்களை இயக்க யுனைடெட் ஏர்லைன்ஸுடன் ஒப்பந்தம் உள்ளது. இந்த விமானங்கள்  இடைக்கால விமானமாகும் என  அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மேலும் கூறினார்.

 பிரான்ஸிற்கு ஜூலை 18 முதல் விமானம்: 

ஜூலை 18-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 1 -ஆம் தேதி வரை டெல்லி, மும்பை, பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து பாரிஸிக்கு 28 விமானங்கள் இயங்க உள்ளது என அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்திற்கு  விமானம்:

டெல்லி – லண்டன் இடையே ஒரு நாளைக்கு இரண்டு விமானங்கள் இயக்கப்படும் என அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

ஜேர்மனியில் இருந்து  லுஃப்தான்சா விமான நிறுவனத்திடம் இருந்து எங்களுக்கு ஒரு கோரிக்கை வந்துள்ளது. இந்த கோரிக்கை கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்று நான் நினைக்கிறேன். நாங்கள் அந்த கோரிக்கையை செயல்படுத்துகிறோம் என அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறினார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விமானங்கள்:

சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின்படி, இந்தியா-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே  குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் ஜூலை 9 அன்று விமானங்கள் இயங்க அனுமதிக்கப்பட்டது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இருந்து இயக்கப்படும் விமானங்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து இந்தியர்களை இந்தியாவுக்கு அழைத்து வரவும்,  ஐக்கிய அரபு எமிரேட் மக்களை  திரும்பி  கொண்டு செல்லவும் அனுமதிக்கப்பட்டுள்ளன.

இந்த விமான சேவை ஜூலை 12 முதல் 26 வரை இருக்கும். கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் மார்ச் 23 முதல் திட்டமிடப்பட்ட சர்வதேச பயணிகள் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், ஏறக்குறைய இரண்டு மாதங்களுக்கு பிறகு  மே 25 ம் தேதி முதல் உள்நாட்டு விமானங்களை மீண்டும் இயங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Venu

Recent Posts

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…

9 hours ago

இரவு 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…

10 hours ago

ரோ-கோ இல்ல கேட்ச் விட்டீங்கனா ஒரு போட்டியை கூட வெல்ல முடியாது! இந்தியாவை எச்சரித்த ஸ்டூவர்ட் பிராட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

10 hours ago

நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம் தான்! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

சென்னை :  2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…

11 hours ago

உதவி கேட்டு கடிதம் அனுப்பிய ஈரான்! “நாங்க ரெடி” என உறுதி கொடுத்த ரஷ்யா!

ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே  11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…

11 hours ago

“நல்ல பவுன்ஸ் இருக்கு மச்சி”…சாய் சுதர்சனிடம் தமிழில் பேசிய கே.எல்.ராகுல்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

13 hours ago