Satyendar Jain AAP [Image source : PTI]
கடும் நிபந்தனைகளுடன் சத்யேந்திர ஜெயினுக்கு 6 வார காலம் ஜாமீன் வழங்கியுள்ளது டெல்லி நீதிமன்றம்.
சட்டவிரோத பணபரிவர்தனையில் ஈடுபட்டதாக கூறி, கைது செய்யப்பட்டு தற்போது திகார் சிறையில் இருக்கும் டெல்லி முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், ஆம் ஆத்மி மூத்த தலைவருமான சத்யேந்திர ஜெயினுக்கு 6 வார காலம் கடும் நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியுள்ளது.
சத்யேந்திர ஜெய்ன் திகார் சிறையில் வருவதற்கு முன்னர் இருந்த எடையை விட அதிகமாக குறைந்துவிட்டார் என்றும் உடல் நிலை அதிகமாக பாதிக்கப்பட்டது என்றும் இரண்டு நாள் முன்னர் கூட கழிவறையிலி விழுந்துவிட்டார் என பல்வேறு மருத்துவ காரணங்களை கூறி டெல்லி நீதிமன்றத்தில் சத்யேந்திர ஜெய்ன் தரப்பு ஜாமீன்கோரியிருந்தது .
இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்ற போது, கோடைகால சிறப்பு அமர்வு நீதிபதிகள் கடும் நிபந்தனைகள் விதித்து ஜாமீன் வழங்கினர். டெல்லியை விட்டு வெளியே செல்ல கூடாது சாட்சியங்களை சந்திக்க கூடாது. சாட்சியங்களை கலைக்க கூடாது. ஊடகங்களை சந்திக்க கூடாது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால் சிகிச்சை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து சத்யேந்திர ஜெய்னுக்கு 6 வார காலத்திற்கு ஜாமீன் வழங்ப்பட்டுள்ளது.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…