Ashok Gehlot summon [Image-PTI]
அவதூறு வழக்கில் சம்மந்தப்பட்ட ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், தொடர்ந்த அவதூறு வழக்கில், ராஜஸ்தான் முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான அசோக் கெலாட் ஆகஸ்ட் 7 ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. 900 கோடி சஞ்சீவனி கடன் கூட்டுறவு சங்க ஊழலில், தன் பெயரை பொய்யாக கூறியதாக மத்திய அமைச்சர் ஷெகாவத், அசோக் கெலாட் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
தன்னையும், தன் தாய் மற்றும் தனது குடும்பத்தினரும் இந்த மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டிய அசோக் கெலாட்டுக்கு எதிராக, கடந்த ஏப்ரலில் மத்திய அமைச்சர் ஷெகாவத் வழக்கு தொடர்ந்திருந்தார். கெலாட் தனது தாயை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் என்று பொய்யாக அழைத்ததாகவும், தனது பெயரை கெடுக்கும் விதமாக, அரசியல் லாபம் பெறும் நோக்கத்துடன் கெலாட் இவ்வாறு கூறியுள்ளதாக அவர் மீது ஷெகாவத் குற்றம் சாட்டினார்.
இந்த அவதூறு வழக்கில் ராஜஸ்தான் முதல்வர், அசோக் கெலாட் ஆகஸ்ட் 7 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகும்படி நீதிபதி ஹர்ஜீத் சிங் ஜஸ்பால், உத்தரவிட்டுள்ளார்.
சென்னை : தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும், ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி…
சென்னை : தமிழகத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்திற்கான விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி இன்று (ஜூலை 07,…
பர்மிங்ஹாம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபேற்று வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 336 ரன்கள்…
தூத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விண்ணை முட்டும் அரோகரா முழக்கத்துடன் குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் வெள்ளத்திற்கு…
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…