கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அமைப்பு சாரா நிறுவனங்களில் வேலைபார்த்த தினக்கூலி தொழிலாளர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தலைநகர் டெல்லியில், சுமார் 6 லட்சம் பேருக்கு மதியம் மற்றும் இரவு உணவு அளித்து வருகிறது டெல்லி அரசு. 5,85,386 பேருக்கு மதிய உணவும், 5,79,162 பேருக்கு இரவு உணவும் வழங்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இதனை 1,423 சென்டர்களில் இருந்து டெல்லி அரசு வழங்கியுள்ளது.
இது குறித்து நேற்று பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ‘ நாங்கள் நேற்று (புதன் ) 3.5 – 4 லட்சம் பேருக்கு உணவளித்துள்ளோம். அடுத்து 10- 12 லட்சம் பேருக்கு உணவளிப்போம். மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் உணவு வழங்கும் இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உள்ளோம்.’ எனவும் தெரிவித்தார்.
அகமதாபாத் : இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 இன் இறுதிப் போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப்…
சென்னை : தமிழக அரசின் திரைப்பட விருதுகள் மற்றும் திரைப்படங்களுக்கான மானியங்கள் கடந்த 2016 முதல் 2022 வரை நிலுவையில் உள்ளது.…
சென்னை : கமல்ஹாசன் நடித்துள்ள தக்லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், தமிழில் இருந்து பிறந்ததுதான்…
அகமதாபாத்: பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல் 2025) இறுதிப் போட்டி தற்போது…
அகமதாபாத் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2025ன் இறுதிப்…
அகமதாபாத்: பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல் 2025) இறுதிப் போட்டி தற்போது…