டெல்லி : இந்து மகாபஞ்சாயத் நிகழ்ச்சியில் தாக்கப்பட்ட பத்திரிகையாளர்கள் …!

Published by
Rebekal

டெல்லியில் உள்ள இருவேறு பகுதிகளில் பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டதாக இரண்டு எப்.ஐ.ஆர் வழக்கு தொடரப்பட்டுள்ளது. புராரி மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்து மகா பஞ்சாயத்தின் போது ஒரு பத்திரிக்கையாளர் தாக்கப்பட்டு உள்ளதாகவும், ஆன்லைன் பொருளில் பணிபுரியும் ஆண் மற்றும் பெண் ஆகிய இரு பத்திரிக்கையாளர்கள் அடையாளம் தெரியாத நபர்கள் தங்களை துன்புறுத்தியதாக வழக்கு தொடர்ந்துள்ளனர்.

எனவே, டெல்லி காவல்துறை ஆன்லைன் பணிபுரியும் பத்திரிகையாளர்களை தாக்கிய நபர்கள் மீது, பாலியல் துன்புறுத்தல், காயம் ஏற்படுத்துதல் மற்றும் பறிக்க முயற்சி செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அதேசமயம் டெல்லி  இந்துமகா பஞ்சாயத்து நடைபெற்ற போது நேர்காணலில் செய்ய முயன்ற பத்திரிக்கையாளர்களை தாக்கியதாக மற்றொரு ஊடகவியலாளர் குற்றம்சாட்டியுள்ளார். எனவே அவர்கள் மீதும் 2வது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பேசியுள்ள இந்துமகா பஞ்சாயத்தில் தாக்கப்பட்ட பத்திரிக்கையாளர் அர்பாப், பின்னால் நின்று கூட்டத்திலிருந்தவர்களை நேர்காணல் செய்ய முயற்சித்தோம். அப்போது சிலர் வந்து எங்களை துன்புறுத்தத் தொடங்கினார்கள்.

எங்களிடம் உள்ள பிரஸ் ஐடி மற்றும் ஆதார் கார்டுகளை கேட்டார்கள், அதன்பின் நாங்கள் ஜமியா நகரை சேர்ந்தவர்கள் என்று தெரிந்ததும், ஜிகாதி என்று எங்களை அழைத்தார்கள். அதன் பின்பு மேடையில் நின்று எங்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்கள், அங்கிருந்த மக்கள் எங்களை காப்பாற்றி தள்ளிக் கொண்டு சென்றனர்.

ஆனால், எங்களது மொபைல் போன்களை பறிமுதல் செய்து அதில் இருந்த வீடியோக்களை அழித்துவிட்டனர். எனது முதுகு மற்றும் கையில் காயம் உள்ளது என குற்றம் சாட்டியுள்ளார். மேலும், காவல்துறை வருவதற்கு முன்பாக தங்களை தாக்கியதாக தெரிவித்துள்ளனர்.

Recent Posts

மணிப்பூரில் மீண்டும் வன்முறை.., துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழப்பு.!

மணிப்பூரில் மீண்டும் வன்முறை.., துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழப்பு.!

மணிப்பூர் : சுராசந்த்பூர் மாவட்டத்தில் 60 வயது பெண் உட்பட காரில் பயணித்த நான்கு பேரை அடையாளம் தெரியாத  நபர்கள்…

40 minutes ago

சிறுவன் கடத்தல்: பூவை ஜெகன்மூர்த்தி எம்எல்ஏவுக்கு முன் ஜாமீன்.!

சென்னை : திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித்…

1 hour ago

இளைஞர் மரணம் – வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் நடந்த சம்பவத்தில், கோவில் தற்காலிக ஊழியரான அஜித்குமார்…

2 hours ago

ஆபாச வசனங்கள் அதிகம்…ரசிகர்களை பதற்றத்தில் ஆழ்த்திய “ஸ்க்விட் கேம் 3”! விமர்சனம் இதோ!

நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவில் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட "ஸ்க்விட் கேம் சீசன் 3" வெளியாகியுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த இந்த…

5 hours ago

வடசென்னை பாணியில் சிம்புவை வைத்து படம்…”ஒரு ரூபாய் கூட தனுஷ் வாங்கல”! வெற்றிமாறன் பேச்சு!

சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால்  நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும்…

5 hours ago

விசாரணைக்கு அழைத்து சென்று இளைஞரை தாக்கியது ஏன்? – உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி!

சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…

6 hours ago