டெல்லியில் ஆக்ஸிஜனை கள்ள சந்தையில் விற்ற கேட் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கைது

Published by
Hema

சட்டவிரோதமாக ஆக்ஸிஜன் விற்பனை செய்யப்பட்டதாக புகார் – போலீஸ் அதிரடி நடவடிக்கை

புதுடெல்லியில் கேட் ஆம்புலன்ஸ் மூலம் சட்டவிரோதமாக ஆக்ஸிஜன் சிலிண்டர்களை விற்பனை செய்த 2 பேரை தென் டெல்லி போலீசார் திங்கள்கிழமை (மே 10) இன்று  கைது செய்துள்ளனர்.

டெல்லியில் உள்ள அம்பேத்கர் நகர் காவல் நிலையத்தில் சட்டவிரோதமாக ஆக்ஸிஜன் விற்பனை செய்யப்பட்டதாக புகார் வந்தது, அதன்பிறகு காவல்துறையினர் விசாரித்தில் பயிற்சி பெற்ற சுகாதாரப் பணியாளரான பவன் மற்றும் அவரது கூட்டாளர் இருவரும் அவர்கள் பணிபுரிந்த கேட் ஆம்புலன்சில் இருந்து ஆக்ஸிஜனை விற்பனை செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

மேலும் பவனை விசாரித்தபோது அவர் காவல்துறையினரை தவறாக வழிநடத்த முயன்றுள்ளார், ஆனால் அவரது தொலைபேசியிலிருந்து தகவல்களை மீட்டெடுத்த காவல்துறையினரின் கடுமையான விசாரணையில் பவன் கள்ள சந்தையில் 15 லிட்டர் ஆக்ஸிஜன் சிலிண்டர்களுக்கு 40 ஆயிரம் ரூபாயும், 50 லிட்டர் ஆக்ஸிஜன்  சிலிண்டர்களுக்கு 90 ஆயிரம் ரூபாயும் சம்பாதித்ததாக தெரியவந்துள்ளது.

மேலும் அவர் சமூக வளைதளத்தில் ஆக்ஸிஜன் தேவைப்படுவோரை தன்னை அனுகும் படி செல்போன் எண்ணை பகிர்ந்துள்ளார். மேலும் பேடிஎம் வழியாக அவர்கள் ஆக்ஸிஜன் தேவைப்படுவோரிடம் இருந்து பணத்தை பெற்றுள்ளனர். மேலும் சோதனையின்போது 2 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், 32 பிபிஇ கிட்கள் மற்றும் ரூ .1 லட்சம் பணத்தை போலீசார் மீட்டுள்ளனர்

இதனையடுத்து ஆக்ஸிஜன் சிலிண்டர்களின் பிளாக் மார்க்கெட்டிங்கில் தொடர்புடைய கேட் ஆம்புலன்ஸ் ஓட்டுனரான விபின் என்ற நபரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

Published by
Hema

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

6 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

7 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

7 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

8 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

10 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

11 hours ago