உத்தர பிரதேச மாநிலம் மீரட் நகரில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 28 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 156 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கமே இன்னும் முடிவடையாத நிலையில், வட மாநிலங்கள் பலவற்றில் தற்போது டெங்கு பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் டெங்கு பாதிப்பால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலம் மீரட் நகரில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 28 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 156 ஆக உயர்வடைந்துள்ளது. இந்நிலையில், இது குறித்து தெரிவித்துள்ள தலைமை மருத்துவ அதிகாரி அகிலேஷ் மோகன் அவர்கள் இதுவரை 70 நோயாளிகள் மருத்துவமனையிலும், 86 பேர் வீட்டு தனிமைப்படுத்துதலிலும் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா : அமெரிக்காவின் B-2 போர் குண்டுவீச்சு விமானங்கள் 'ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்' என்ற திட்டத்தின் கீழ், ஈரானின் மூன்று…
அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட 4 விண்வெளி வீரர்களுடன் ஃபால்கன்-9 ராக்கெட் பல தடைகளை…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
அமெரிக்கா : சர்வேதேச விண்வெளி மையத்துக்கு செல்வதற்காக ஆக்சியம் எனும் தனியார் நிறுவனம் இஸ்ரோ மற்றும் நாசாவுடன் இணைந்து 'ஆக்சியம்…
சென்னை : மதுரையில் கடந்த ஜூன் 22ம் தேதி பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பால் நடத்தப்பட்ட முருகன் பக்தர்கள்…
திருப்பூர் : இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு ஒன்றியத் தலைவராக இருந்த பாலமுருகன் என்பவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்திவந்த…