இந்திய வம்சாவளியை சேர்ந்த நாகேந்திரன் தர்மலிங்கம் எனும் 34 வயதுடைய நபர் மலேசியாவில் வசித்து வருகிறார். இவர் கடந்த 2009ஆம் ஆண்டு 42.72 கிராம் எடையுள்ள ஹெராயின் எனும் போதை பொருளை சிங்கப்பூருக்குள் கடத்தியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக இவருக்கு தூக்குத் தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று காலை நாகேந்திரன் தர்மலிங்கம் சிங்கப்பூரில் வைத்து தூக்கிலிடப்பட்டுள்ளார். தூக்கிலிடப்பட்ட தர்மலிங்கத்தின் உடல் வடக்கு தீபகற்ப மலேசியாவில் உள்ள ஈப்போ எனும் நகரில் வசித்து வரும் தர்மலிங்கத்தின் சகோதரர் நவீன் குமாரிடம் கொடுக்கப்படும் என கூறப்படுகிறது.
தூக்கிலிடப்பட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த நாகேந்திரன் மனநலம் குன்றியவர் என கூறப்படுகிறது. தர்மலிங்கம் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் அவரை தூக்கிலிடுவதற்கு பல எதிர்ப்புகள் எழுந்துள்ளது. இருந்தாலும் அவர் இன்று தூக்கிலிடப்பட்ட செய்தியை அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…