போதைப்பொருள் கடத்தல் விவகாரம்.! கைது செய்யப்பட்ட நடிகை சஞ்சனா கல்ராணி.!

Published by
Ragi

போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் மீண்டும் ஒரு கன்னட நடிகையான சஞ்சனா கல்ராணி கைது செய்யப்பட்டுள்ளார்.

கன்னட திரைப்பட தயாரிப்பாளரும், பத்திரிக்கையாளருமான இந்திரஜித் லங்கேஷ் பெங்களூர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் கன்னட திரையுலகில் உள்ள 15 நடிகை மற்றும் நடிகர்களுக்கு போதை பொருள் விற்பனை செய்யும் கும்பலுடன் தொடர்பு இருப்பதாகவும், சிலர் போதை பழக்கம் உடையவர்கள் என்றும் குற்றம்சாட்டினார். அதனையடுத்து அவரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை தொடர்ந்து ராகினி திவேத் மற்றும் சஞ்சனா கல்ராணிக்கு நேரில் ஆஜராக கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அவர்கள் இருவரும் ஆஜராகாத நிலையில் கடந்த வாரம் பெங்களூர் எலகங்காவில் உள்ள வீட்டில் வைத்து ராகினி திவேத்தை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

இதனை தொடர்ந்து தற்போது பிரபல நடிகையான நிக்கி கல்ராணியின் சகோதரியும், கன்னட த
நடிகையுமான சஞ்சனா கல்ராணியின் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அதனையடுத்து பெங்களூர் இந்திரநகரில் உள்ள அவரது வீட்டிலிருந்து சஞ்சனா கல்ராணியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதுவரை போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் ராகினி திவேத் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by
Ragi

Recent Posts

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…

3 hours ago

இரவு 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…

3 hours ago

ரோ-கோ இல்ல கேட்ச் விட்டீங்கனா ஒரு போட்டியை கூட வெல்ல முடியாது! இந்தியாவை எச்சரித்த ஸ்டூவர்ட் பிராட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

4 hours ago

நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம் தான்! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

சென்னை :  2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…

4 hours ago

உதவி கேட்டு கடிதம் அனுப்பிய ஈரான்! “நாங்க ரெடி” என உறுதி கொடுத்த ரஷ்யா!

ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே  11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…

5 hours ago

“நல்ல பவுன்ஸ் இருக்கு மச்சி”…சாய் சுதர்சனிடம் தமிழில் பேசிய கே.எல்.ராகுல்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

6 hours ago