தேர்தல் வன்முறை : மே. வங்கத்தில் இன்று 4 மாவட்டங்களில் மறுவாக்குபதிவு.!

Published by
மணிகண்டன்

தேர்தல் வன்முறை காரணமாக மேற்கு வங்கத்தில் இன்று 4 மாவட்டங்களில் மறுவாக்குபதிவு நடைபெறுகிறது.

மேற்குவங்க மாநிலத்தில் கடந்த 8ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெற்றது. இதில் பல்வேறு இடங்களில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து வன்முறைகள் அதிகமாகின. இந்த வன்முறை சம்பவங்களில் பலர் உயிரிழந்து உள்ளனர்.

கடந்த 8 தேதி பலத்த பாதுகாப்பு மடியில் வாக்குப்பதிவு தொடங்கிய சில மணி நேரத்திலேயே பல்வேறு இடங்களில் வன்முறைகள் அதிகமாகின. வாக்கு பெட்டிகள் தூக்கிச் சென்று உடைக்கப்பட்டன. வாக்குச்சாவடிற்கு தீ வைக்கப்பட்டது. பல்வேறு இடங்களில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடைபெற்றன. மக்கள் வாக்களிக்கவே சில இடங்களில் செல்ல மறுத்தனர்.

இதனால் இந்த மேற்குவங்க உள்ளாட்சித் தேர்தலில் உயிரிழந்தோர் எண்ணிக்கையானது 37 ஆக உயர்ந்தது. இதில் 20 பேர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

வன்முறை சம்பவங்கள் காரணமாக கடந்த 8ஆம் தேதி நடைபெறாமல் இருந்த வாக்கு பதிவு இன்று நான்கு மாவட்டங்களில் உள்ள 697 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது.

Published by
மணிகண்டன்

Recent Posts

பிரமாண்ட ரோட் ஷோ…முதலமைச்சருக்கு மதுரை மக்கள் உற்சாக வரவேற்பு!

மதுரை : தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில், தேர்தலில் பங்கேற்கும் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கான வேளைகளில்…

49 minutes ago

வாய்ப்பை இப்படி தான் பயன்படுத்தனும்! இரட்டை சதம் விளாசி சொல்லிக்கொடுத்த கருண் நாயர்!

கேன்டர்பரி : இந்திய கிரிக்கெட் வீரர் கருண் நாயர் இளம் கிரிக்கெட் வீரர்கள் கிடைத்த வாய்ப்புகள் எப்படி பயன்படுத்தவேண்டும் என்கிற அளவுக்கு…

1 hour ago

ராமதாஸ் ரெடியா இருக்காரு…அடுத்து அன்புமணியிடம் பேச வேண்டும் -ஜி.கே.மணி!

சென்னை :  பாமக நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு பெரிய அளவில் பேசுபொருளாக…

2 hours ago

நடிகர் ராஜேஷ் மறைவு…தனக்குத் தானே கட்டிய கல்லறையில் உடல் நல்லடக்கம்!

சென்னை : தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் ராஜேஷ், தனது 75-ஆவது வயதில் சென்னையில் மாரடைப்பால் காலமானார். இவருடைய மறைவு சினிமா…

2 hours ago

நோட் பண்ணிக்கோங்க இந்த வருஷம் கப் ஆர்சிபிக்கு தான்! அடிச்சு சொல்லும் ஏபி டிவிலியர்ஸ்!

பெங்களூர் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி இதுவரை ஐபிஎல் பட்டத்தை வெல்லவில்லை என்றாலும், 2025ஆம் ஆண்டு அவர்களுக்கு…

3 hours ago

“வீரத்தின் அடையாளம் குங்குமம்”..பிரதமர் மோடி பேச்சு!

மத்திய பிரதேசம் :  இந்தியா vs பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த போரில்…

4 hours ago