West bengal localbody election [Image source : PTI]
தேர்தல் வன்முறை காரணமாக மேற்கு வங்கத்தில் இன்று 4 மாவட்டங்களில் மறுவாக்குபதிவு நடைபெறுகிறது.
மேற்குவங்க மாநிலத்தில் கடந்த 8ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெற்றது. இதில் பல்வேறு இடங்களில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து வன்முறைகள் அதிகமாகின. இந்த வன்முறை சம்பவங்களில் பலர் உயிரிழந்து உள்ளனர்.
கடந்த 8 தேதி பலத்த பாதுகாப்பு மடியில் வாக்குப்பதிவு தொடங்கிய சில மணி நேரத்திலேயே பல்வேறு இடங்களில் வன்முறைகள் அதிகமாகின. வாக்கு பெட்டிகள் தூக்கிச் சென்று உடைக்கப்பட்டன. வாக்குச்சாவடிற்கு தீ வைக்கப்பட்டது. பல்வேறு இடங்களில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடைபெற்றன. மக்கள் வாக்களிக்கவே சில இடங்களில் செல்ல மறுத்தனர்.
இதனால் இந்த மேற்குவங்க உள்ளாட்சித் தேர்தலில் உயிரிழந்தோர் எண்ணிக்கையானது 37 ஆக உயர்ந்தது. இதில் 20 பேர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
வன்முறை சம்பவங்கள் காரணமாக கடந்த 8ஆம் தேதி நடைபெறாமல் இருந்த வாக்கு பதிவு இன்று நான்கு மாவட்டங்களில் உள்ள 697 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு, ஜூலை 26 இன்று அன்று மாலை 7:50 மணிக்கு தூத்துக்குடி…
சென்னை : இன்றயை தலைமுறையினர் பலருக்கும் பேவரைட் இயக்குனராக மாறியிருக்கும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் கமல்ஹாசன், ரஜினி, விஜய்,…
மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 23-27, 2025), இந்திய அணியின் இரண்டாவது…
அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 27, 2025 அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலுக்கு…
மான்செஸ்டர் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஜோ ரூட், இந்தியாவுக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட்…
மும்பை : ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகை தனுஸ்ரீ தத்தா, திரைத்துறையில் பாலியல் அத்துமீறல் குறித்த ‘Me…