கொரோனா பரவல் எதிரொலி..! இந்தியாவிலிருந்து தனி விமானம் மூலம் தப்பிச் செல்லும் பணக்காரர்கள்..!

Published by
Edison

கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு கிட்டத்தட்ட 3,50,000-த்தினை எட்டியுள்ளது.இதன்காரனமாக,இந்தியாவில் உள்ள பணக்காரர்கள் தனியார் ஜெட் விமானங்கள் மூலம் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்கின்றனர்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது.இதனால்,மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் மற்றும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை நிலவுகிறது.இந்த காரணத்தினால்,கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சரியான சிகிச்சை அளிக்க முடியாமல் நோயாளிகள் இறக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்தியாவில் உள்ள பணக்காரர்கள் பலர்,அதிக அளவில் பணம் செலவு செய்து ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு போன்ற சில நாடுகளுக்கு தனி விமானங்களை முன்பதிவு செய்து இந்தியாவில் இருந்து தப்பிச் செல்கின்றனர்.

இதுகுறித்து,புதுடெல்லியைச் சேர்ந்த தனியார் ஜெட் நிறுவனமான கிளப் ஒன் ஏர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜன் மெஹ்ரா கூறுகையில்,”கொரோனா பரவல் காரணமாக கனடா, ஹாங்காங், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் யு.கே ஆகிய நாடுகள்,இந்தியர்கள் தங்கள் நாட்டிற்கு வர தடைகளை விதித்துள்ளன.மேலும்,மற்ற நாடுகள் நடவடிக்கைகளை அறிவிக்க தயாராக உள்ளன.

இந்நிலையில்,இந்தியாவில் இருக்கும் பணக்காரர்கள் அதிக அளவில் பணம் கொடுத்து,தனியார் ஜெட் விமானங்களை எடுத்துக் கொண்டு வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்கின்றனர்.அதாவது,புது தில்லியில் இருந்து துபாய்க்கு விமானம் மூலம் சென்றால்,தரை இறங்குதல் மற்றும் பிற கட்டணங்கள் உட்பட 1.5 மில்லியன் ரூபாய் ($ 20,000) செலவாகும்.

அதுமட்டுமல்லாமல்,நாட்டின் சுகாதார உள்கட்டமைப்பு நெருக்கடியின் கீழ் உள்ளதால்,பாலிவுட் திரைப்பட சூப்பர்ஸ்டார்கள் போன்றோர் மாலத்தீவு உள்ளிட்ட இடங்களுக்கு தப்பிச் செல்கின்றனர்.மேலும்,மூன்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் இந்தியன் பிரீமியர் லீக்கிலிருந்து விலகி அவரவர் சொந்த நாடுகளுக்கு திரும்பியுள்ளனர்”,என்று கூறினார்.

 

Published by
Edison

Recent Posts

கில் மாதிரி விளையாட ஆசைப்படுகிறேன்…சாதனை படைத்த வைபவ் சூர்யவம்சி பேச்சு!

கில் மாதிரி விளையாட ஆசைப்படுகிறேன்…சாதனை படைத்த வைபவ் சூர்யவம்சி பேச்சு!

லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…

8 hours ago

மஸ்கின் கட்சியில் இந்த மூன்று அமெரிக்கர்கள் இணைவார்கள்! ட்ரம்ப் ஆதரவாளர் லாரா லூமர் கணிப்பு!

வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…

8 hours ago

மடப்புரம் அஜித் சகோதரர் நவீன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி! என்ன காரணம்?

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…

10 hours ago

2 கோடி உறுப்பினர்களை சேர்க்க த.வெ.க மும்முரம்… ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு!

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…

10 hours ago

சுப்மன் கில் பேட்டிங் பார்த்து சோர்ந்துட்டோம்! அரண்டு போன இங்கிலாந்து பயிற்சியாளர்!

பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…

12 hours ago

தூத்துக்குடி விமானத்தில் இயந்திர கோளாறு! அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தம்!

தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…

13 hours ago