Categories: இந்தியா

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு.! ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் கைது.!

Published by
மணிகண்டன்

டெல்லியில் கடந்த 2021 ஆம் ஆண்டு இறுதியில் புதிய மதுபான கொள்கை அமல்படுத்தப்பட்டு, அதன் பிறகு அந்த கொள்கை திரும்ப பெறப்பட்டது. இந்த விவகாரத்தில் அரசுக்கு பலகோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக கூறி சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

மதுபான கொள்கை முறைகேடு வழக்குக் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த மாநிலங்களவை எம்பி சஞ்சய் சிங் வீட்டில் இன்று அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். சஞ்சய் சிங்கின் வீடு, அவர் தொடர்புடைய இடங்கள்  , சஞ்சய் சிங் உதவியாளர் வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இன்று அதிகாலை தொடங்கிய சோதனை முடிவில், தற்போது ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட அவர் தற்போது அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு கொண்டு செல்லபட உள்ளார். இதற்கு முன்னதாக, ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த டெல்லி கலால் துறை  முன்னாள் அமைச்சர் மணீஷ் சிசோடியா இதே வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் புதிய மதுபான கொள்கை மூலம் அரசு கட்டுப்பாட்டில் இருந்த மதுபான விற்பனையை 849 தனியார் மதுபான கடைகளுக்கு அனுமதி அளித்தது. அதன் பின்னர் இந்த கொள்கை திரும்ப பெறப்பட்டது. 2800 கோடி ரூபாய் வரையில் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கின் கீழ் ஏற்கனவே, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மற்றும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதாவிடமும் விசாரணை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Published by
மணிகண்டன்

Recent Posts

ஆ.ராசா மீது சரிந்த மின் விளக்குகள்., நூலிழையில் தப்பிய பரபரப்பு காட்சிகள் இதோ..

மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…

1 hour ago

நாடு முழுவதும் நீட் தேர்வு.., சோதனை கெடுபிடிகள், தற்கொலை முதல் வினாத்தாள் மோசடி வரை…

சென்னை : நேற்று (மே 4)  இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…

2 hours ago

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

2 days ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

2 days ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

2 days ago