Categories: இந்தியா

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு.! ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் கைது.!

Published by
மணிகண்டன்

டெல்லியில் கடந்த 2021 ஆம் ஆண்டு இறுதியில் புதிய மதுபான கொள்கை அமல்படுத்தப்பட்டு, அதன் பிறகு அந்த கொள்கை திரும்ப பெறப்பட்டது. இந்த விவகாரத்தில் அரசுக்கு பலகோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக கூறி சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

மதுபான கொள்கை முறைகேடு வழக்குக் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த மாநிலங்களவை எம்பி சஞ்சய் சிங் வீட்டில் இன்று அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். சஞ்சய் சிங்கின் வீடு, அவர் தொடர்புடைய இடங்கள்  , சஞ்சய் சிங் உதவியாளர் வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இன்று அதிகாலை தொடங்கிய சோதனை முடிவில், தற்போது ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட அவர் தற்போது அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு கொண்டு செல்லபட உள்ளார். இதற்கு முன்னதாக, ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த டெல்லி கலால் துறை  முன்னாள் அமைச்சர் மணீஷ் சிசோடியா இதே வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் புதிய மதுபான கொள்கை மூலம் அரசு கட்டுப்பாட்டில் இருந்த மதுபான விற்பனையை 849 தனியார் மதுபான கடைகளுக்கு அனுமதி அளித்தது. அதன் பின்னர் இந்த கொள்கை திரும்ப பெறப்பட்டது. 2800 கோடி ரூபாய் வரையில் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கின் கீழ் ஏற்கனவே, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மற்றும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதாவிடமும் விசாரணை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Published by
மணிகண்டன்

Recent Posts

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறை தண்டனை.!

வங்கதேசம் : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், பங்களாதேஷின் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு இன்று சர்வதேச குற்றவியல்…

26 minutes ago

INDvsENG : ஓய்வுக்கு டைம் இருந்துச்சு…பும்ரா கண்டிப்பா விளையாடனும்! அடம் பிடிக்கும் புட்சர்!

எட்ஜ்பாஸ்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெறவுள்ள…

1 hour ago

மன்னிப்பு கேட்க சொல்லியும் கேட்கல…பாமகவில் இருந்து அருளை நீக்கிய அன்புமணி!

சென்னை :  சேலம் மேற்கு தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) எம்.எல்.ஏ. அருளை கட்சியிலிருந்து நீக்குவதாக பாமக தலைவர்…

2 hours ago

முதல்முறையாக வேலைக்கு செல்வோருக்கு ரூ.15,000 ஊக்கத்தொகை! மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

டெல்லி: முதல்முறையாக வேலைக்கு செல்வோருக்கு ஒரு மாத ஊதியமாக ரூ.15,000 வரை இரண்டு தவணைகளில் வழங்கும் “வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை…

2 hours ago

திருப்புவனம் இளைஞர் மரண விவகாரம்: அங்கீகரிக்கப்படாத தனிப்படைகளை கலைக்க உத்தரவு!

சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் இளைஞர் அஜித்குமார் காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

3 hours ago

திருப்புவனம் : உயிரிழந்த இளைஞர் அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமாருக்கு அரசுப் பணி!

சிவகங்கை: திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும்…

4 hours ago