சிறிய எழுத்து பிழை காரணமாக உத்தரபிரதேச பிரயாகராஜில் ஒரு நபர் ஜாமீன் பெற்ற போதிலும் கூடுதலாக எட்டு மாதங்கள் சிறையில் இருந்துள்ளார். ஜாமீன் உத்தரவில் அவரது நடுப்பெயர் இல்லாததால் ஒரு குற்றவாளி மேலும் எட்டு மாதங்கள் சிறையில் வைக்கப்பட்டார்.
ஜாமீன் உத்தரவு (கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது) குற்றம் சாட்டப்பட்டவரின் உண்மையான பெயர் ‘வினோத் குமார் பருவார்’ ஆனால், ஜாமீன் உத்தரவில் ‘வினோத் பருவார்’ என்று குறிப்பிட்டுள்ளதால், சிறை கண்காணிப்பாளர் விடுவிக்க மறுத்துவிட்டார்.
குற்றம் சாட்டப்பட்ட வினோத் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை செஷன்ஸ் நீதிமன்றம் 2019 செப்டம்பர் 4-ம் தேதி அன்று ரத்து செய்தது, அதன் பின்னர் அவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தை அணுகினார். இதைத்தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி ஐகோர்ட் அவருக்கு ஜாமீன் வழங்கியது, ஆனால் ரிமாண்ட் உத்தரவு மற்றும் ஜாமீன் உத்தரவில் உள்ள பெயர் வேறுபாடு காரணமாக, பார்வார் சிறையில் இருந்து விடுவிக்கப்படவில்லை.
பின்னர், அவர் தனது பெயரை திருத்துவதற்காக ஒருமனு தாக்கல் செய்தார், இது உயர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு வந்தது. அப்போது, நீதிபதி முனீர் கூறுகையில், இந்த நீதிமன்றத்தின் உத்தரவுகளை நிறைவேற்றுவதில் சிறை நிர்வாகத்தின் பிடிவாதமான அணுகுமுறை என்று தோன்றுகிறது.
சிறை கண்காணிப்பாளர் ராகேஷ் சிங் நீதிமாற்றத்தின் முன் ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. அவருக்கு எதிராக ஏன் துறை ரீதியான விசாரணையை ஏன்..? பரிந்துரைக்கக்கூடாது என கூறினார். பின்னர், எதிர்காலத்தில் ராகேஷ் சிங் கவனமாக இருக்கவும், கைதிகளை விடுவிப்பது தொடர்பான உத்தரவுகளுக்கு இணங்க வேண்டும் என நீதிமன்றம் எச்சரித்தது. இறுதியாக பார்வார் டிசம்பர் 8 அன்று சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
டெல்லி : ஜூன் 26, 2025 அன்று, சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…
சென்னை : நாட்டின் வடமேற்கு மத்திய பகுதிகள், மத்திய பகுதிகள், கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த 7…
சென்னை : போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கழுகு பட ஹீரோ கிருஷ்ணாவை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே இந்த…
திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் ரூ.174.39 கோடி செலவில் 11 துறைகள் சார்ந்த 90 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர்…