இந்தியா

சபாநாயகர் பேச அனுமதி அளித்தாலும் ஆளுங்கட்சி எம்பிக்கள் பேச விடுவதில்லை – திமுக எம்பி திருச்சி சிவா

Published by
லீனா

நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த 20-ஆம் தேதி தொடங்கிய நிலையில், மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக தொடர் முழக்கமிட்டு அமளியில் ஈடுபட்டு வந்த நிலையில்,  8 நாட்களாக நாடாளுமன்றம் முடக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், டெல்லியில் திமுக எம்பி திருச்சி சிவா அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற இரு அவைகளும் முடங்கியதற்கு, ஆளும் கட்சிதான் காரணம். சபாநாயகர் பேச அனுமதி அளித்தாலும் ஆளுங்கட்சி எம்பிக்கள் பேச விடுவதில்லை.

எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசிய போது மைக்கை அணைத்து இடையூறு செய்தனர். எதிர்கட்சி தலைவர் பேச எழுந்தாலே அவரை பேச விடாமல் அமளியில் ஈடுபடுகின்றனர். நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு பிரதமரோ, ஆளும் அரசோ மரியாதை தருவதில்லை.

பிரதமர் அவைக்கு வந்து பதில் தர வேண்டுமென கேட்பது நியாயமான கோரிக்கை. மணிப்பூர் வன்முறை குறித்து விவாதம் நடத்த வேண்டும் என பிடிவாதம் பிடிக்கவில்லை; உறுதியாக இருக்கிறோம். மணிப்பூர் குறித்த விவாதத்துக்கு பிரதமர் வந்து பதிலளிக்க வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கையாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

பிரதமர் மோடியைச் சந்திக்க இபிஎஸ் திட்டம்.! அனுமதி மறுக்கப்பட்டதால் ஓ.பன்னீர்செல்வம் ஏமாற்றம்.!

தூத்துக்குடி : 2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார். தற்போது மாலத்தீவில் உள்ள பிரதமர் அங்கிருந்து…

29 minutes ago

நடைபயணத்திற்கு தடை – நீதிமன்றத்தை நாடும் அன்புமணி.!

சென்னை : அன்புமணியின் நடைப்பயணத்துக்கு தடை விதித்து டிஜிபி உத்தரவிட்ட நிலையில், அனுமதி கோரி இன்று சென்னை உயர் நீதிமன்றத்தை…

55 minutes ago

2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வருகை.!

தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 26, 2025) தமிழ்நாட்டிற்கு இரண்டு நாள் பயணமாக வருகிறார். தற்போது…

1 hour ago

நாளை எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம் சொன்ன தகவல்!

சென்னை : நேற்று காலை வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மாலை ஆழ்ந்த…

11 hours ago

“சாரித்திரம் புரட்டு போராட்டம் பல்லாயிரம்”…வலியிலும் வரலாறு படைத்த ரிஷப் பண்ட்!

மான்செஸ்டர் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட்…

12 hours ago

இன்ஸ்டா பிரபலம் இலக்கியா விவகாரம் : திலீப் சுப்பராயன் விளக்கம்!

சென்னை : இன்ஸ்டாகிராம் பிரபலமான இலக்கியா, ஜூலை 24, 2025 அன்று சென்னையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும், இதற்கு தமிழ்…

13 hours ago