Miyazaki [Image Source : Twitter /@ani_digital]
உலகின் விலை உயர்ந்த மாம்பழமான ‘மியாசாகி’ ராய்ப்பூர் மாம்பழத் திருவிழாவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் உள்ள சர்வதேச சந்தையில் மாம்பழத் திருவிழா நடைபெற்று வருகிறது. அந்த விழாவில் ரூபாய் 1.82 லட்சம் மதிப்புள்ள உலகின் விலை உயர்ந்த மாம்பழமான ‘மியாசாகி’ காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த ‘மியாசாகி’ மாம்பழம் ஒரு கிலோ ரூ. 2.75 லட்சத்துக்கு விற்கப்படுகிறது.
சுமார் 639 கிராம் எடை கொண்ட ‘மியாசாகி’ மாம்பழம் ஜப்பானில் வளர்க்கப்படுகிறது. இந்த ‘மியாசாகி’ வகை மாம்பழம் ஜப்பானின் புகழ்பெற்ற மாம்பழமாகும். சூரிய ஒளி படும் இந்த மாம்பழத்தின் பகுதி ஒருவித சுவையும், மற்ற பகுதி வேறு விதமான சுவையும் கொண்டிருக்கும்.
திருவிழாவில் மாம்பழங்களை காட்சிப்படுத்திய கோல் இந்தியா நிறுவனத்தின் பொது மேலாளர் கூறுகையில், இந்த மாம்பழத்தை வளர்க்க அதிக அக்கறை தேவை. இந்த மாம்பழங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களின் பரிசளிப்பு நோக்கங்களுக்காக வியாபாரம் செய்யப்படுவதால், இந்த மாம்பழத்தின் விலை சாதாரண மாம்பழங்களை விட அதிகமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…