அரசு ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்கள் அனைவரும் ஜூலை 1-ஆம் தேதிக்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை அவர்கள் கூறியுள்ளார்.
புதுச்சேரியில் கடந்த ஜூன் 16-ஆம் தேதி முதல் தடுப்பூசி திருவிழா நடைபெற்று வருகிறது. தற்பொழுது இது குறித்து பேசி உள்ள புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை அவர்கள், புதுச்சேரியில் நடைபெறும் தடுப்பூசி திருவிழாவில் அதிக அளவில் மக்கள் தடுப்பூசி போட தொடங்கியுள்ளதால் தடுப்பூசி திருவிழா ஜூன் 21ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.எனவே, ஜூலை 1-ஆம் தேதிக்குள் அரசு ஊழியர்கள் மற்றும் முன் களப்பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
கொரோனா மூன்றாம் அலை விரைவில் வர இல்லாதால் அனைவரும் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும் எனவும், பெற்றோர்கள் அனைவரும் குழந்தைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தடுப்பூசி செலுத்துவதில் பொதுமக்களுக்கு தற்பொழுது தயக்கம் குறைந்து வருவதாக கூறியுள்ள அவர், கொரோனாவில் இருந்து விடுபட்டவர்களுக்கு யோகா சிறந்த மருந்தாக உள்ளதாகவும், யோகா கலையை கற்றுக் கொண்டால் எந்த அலை வந்தாலும் சமாளிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…