ஜம்மு-காஷ்மீரின் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முப்தியின் வீட்டு காவலை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க காஷ்மீர் நிர்வாகம் உத்தரவு.
கடந்த ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கு உண்டான அதிகாரம் வழங்கும் 370 ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டு, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்கள் ஆக பிரித்து மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியது தினமே ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி, தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா மற்றும் அவரது மகன் உமர் அப்துல்லா ஆகிய நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா, பரூக் அப்துல்லா ஆகிய மூவர் மட்டும் பொது பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.
பொது பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள இவர்களை விசாரணையின்றி ஓராண்டு வரையும் காவலில் வைத்திருக்க முடியும். கடந்த வருட ஆகஸ்ட் மாதம் முதல் வீட்டுக் காவலில் இருந்த உமர் அப்துல்லா மற்றும் பரூக் அப்துல்லா ஆகியோர் இந்த வருடம் மார்ச் மாதம் விடுவிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முப்தியை அரசு விடுவிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அது மட்டுமல்லாமல் வருகிற ஆகஸ்ட் 5-ம் தேதியுடன் அவரது வீட்டு காவலும் முடிவடைய இருப்பதால் மேலும் மூன்று மாதங்களுக்கு வீட்டு காவலில் வைக்க ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
கர்நாடகா : ஐபிஎல்-லில் வெற்றி பெட்ரா ஆர்.சி.பி அணி, வெற்றியின் கொண்டாத்தின்போது நேற்றைய தினம் நடந்த சின்னசாமி மைதானம் அருகே…
டெல்லி : இந்திய வானிலை மையம் சார்பில் வெளியிடப்படும் நிகழ்நேர தரவுகளை (IMD-AWS Reports) பொதுபயன்பாட்டிலிருந்து நீக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
கோவை : தமிழ்நாட்டில் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்ற பிறகு, நயினார் நாகேந்திரன்,…
கர்நாடகா : பெங்களூருவில் நேற்றைய தினம் நடந்த கூட்ட நெரிசல் தொடர்பாக, பெங்களூரு காவல்துறை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி),…
சென்னை : இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா, அபிராமி, ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்து, ஏ.ஆர்.…
சென்னை : இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, த்ரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படம் கர்நாடக மாநிலம்…