விதி தான் என்னை இந்த இடத்திற்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறது – நிர்மலா சீதாராமன்!

Published by
Rebekal

வாழ்க்கையில் உங்கள் கனவு என்னவாக இருந்தது என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், விதிதான் தன்னை இந்த இடத்திற்கு கொண்டு வந்து சேர்த்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.

நேற்று பெங்களூருவில் நடைபெற்ற தொழிற்சாலைகள் மற்றும் வணிக சேம்பர் சந்திப்பில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் பங்கேற்ற நிர்மலா சீதாராமனிடம் நீங்கள் இந்த நிலைக்கு வருவதற்கான உந்துதல் யாரிடமிருந்து கிடைத்தது எனவும், உங்களது சிறுவயது கனவு என்னவாக இருந்தது எனவும், உங்களது ரோல் மாடல் யார் எனவும் பல்வேறு கேள்விகள் தொடர்ச்சியாக கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், மிக நல்ல கேள்வியை கேட்டுள்ளீர்கள். எனக்கு கனவு என்று ஒன்று சிறுவயது முதல் இருந்ததாக தெரியவில்லை. ஆனால் எனக்கு முன்னால் இருந்த வேலைகளை நான் செய்து கொண்டிருந்தேன். வாழ்க்கையை அதன் போக்கில் வாழ விட்டேன், எதையும் நான் திட்டமிட்டு செய்யவில்லை. விதிதான் என்னை இந்த இடத்திற்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறது என கூறியுள்ளார். மேலும் தற்பொழுது எனக்கு இந்த பணியை கொடுத்தவர்களையோ அல்லது இந்திய மக்களையோ வருத்தம் அடையச் செய்யாமல் நடந்து கொள்ள வேண்டும் என்பது மட்டுமே எண்ணமாக இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…

9 hours ago

இரவு 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…

10 hours ago

ரோ-கோ இல்ல கேட்ச் விட்டீங்கனா ஒரு போட்டியை கூட வெல்ல முடியாது! இந்தியாவை எச்சரித்த ஸ்டூவர்ட் பிராட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

10 hours ago

நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம் தான்! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

சென்னை :  2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…

11 hours ago

உதவி கேட்டு கடிதம் அனுப்பிய ஈரான்! “நாங்க ரெடி” என உறுதி கொடுத்த ரஷ்யா!

ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே  11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…

11 hours ago

“நல்ல பவுன்ஸ் இருக்கு மச்சி”…சாய் சுதர்சனிடம் தமிழில் பேசிய கே.எல்.ராகுல்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

12 hours ago