நெருக்கடியில் சிக்கிதவிக்கும் எல்ஐசி : 25% பங்குகளை விற்க ரெடியாகும் மத்திய அரசு…!

Published by
Kaliraj

நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் எல்ஐசி நிறுவனத்தின் 25 சதவீத பங்குகளை விற்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எல்ஐசி நிறுவனத்தின் 25 சதவீத பங்குகளை விற்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நிதிப்பற்றாக்குறையை 3.5 சதவீதமாக வைத்திருக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து உள்ளது.

இதற்கிடையே கொரோனாவால் வருவாய் பெருமளவு  பாதிக்கப்பட்டு உள்ளதால் அதனால்  ஏற்பட்ட நிதிப்பற்றாக்குறையை ஈடுகட்ட, மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக எல்ஐசியில் (இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம்) உள்ள 25 சதவீத பங்குகளை விற்க முடிவு செய்துள்ளது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து மத்திய அரசு அதிகாரிகள்  கூறுகையில், நடப்பு நிதியாண்டில் பொதுத்துறை நிறுவனங்களின் சொத்து மற்றும் பங்குகள் விற்பனை மூலமாக சுமார் 2.1 லட்சம் கோடி திரட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்தது.

ஆனால், கடந்த ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து 5,700 கோடி மட்டுமே திரட்டப்பட்டு உள்ளது. தற்போது எல்ஐசி நிறுவன பங்குகளை விற்க வசதியாக  சட்ட திருத்தங்களில் மாற்றம் செய்யவும், இதற்காக நாடாளுமன்ற ஒப்புதலைப் பெறவும் திட்டமிடப்பட்டு உள்ளதாக கூறினார். நிதிப்பற்றாக்குறையை ஈடுகட்ட, நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனத்தின் பங்குகளை மத்திய அரசு விற்க முடிவு எடுத்துள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published by
Kaliraj

Recent Posts

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

4 hours ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

4 hours ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

5 hours ago

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…

5 hours ago

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

7 hours ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

8 hours ago